ஜில் புயல் எச்சரிக்கை

குமரி எஸ். நீலகண்டன்

cyclone

ஒரு நீடித்த மௌனம்
நெடும்புயலாகிறது.

வீறுகொண்ட
அதன் விழிகளுக்குத்
திசைகள் இல்லை.

காலத்தின் பசிக்
கால்களால் அதன்
வயிற்றை நசுக்கும்போது
அசைவப் பிரியனாய்
புயல் இழுத்துக்கொள்ளும்
அதன் வயிற்றில்
ஆயிரமாயிரம் உயிர்களையும்
குடில்களோடு கூடவே
அதனுள் பசித்த
குடல்களையும்
அசையாத பசும்
மரங்களையும்…
இன்னும் அதைச் சீரணிக்க
வானக் கலயம்
வார்க்கும் நீரையும்.

ஜில்லெனப் பெயர் வைத்து
ஜல்லென அழைத்தாலும்
நில்லெனச் சொன்னாலும்
நில்லாது செல்கிறது
அசுரப் புயல்.

காற்றடிக்கட்டும்
கடலைத் தின்னட்டும்
மழையைக் கக்கட்டும்
பாவம்..
உயிர்களை மட்டும்
விட்டு விடட்டும்.

=========================

படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

குமரி எஸ். நீலகண்டன்

குமரி எஸ். நீலகண்டன்

எழுத்தாளர்

Share

One Comment on “ஜில் புயல் எச்சரிக்கை”

  • எல்.கார்த்திக்
    Karthik wrote on 10 November, 2010, 9:33

    நல்லா இருக்கு

Write a Comment [மறுமொழி இடவும்]


5 + = 8


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.