மாய லீலை!

 

திரு அரசு

மாய லீலை!

பௌர்ணமி நிலவென்று வர்ணித்தேனவளை!

துவண்டாள் நகைத்தாள் மலர்ந்தாள்!
செந்தாமரை மலரெனத் துதித்தேன்!
அகன்ற கண்களால் மயக்கினாள்!
கயல்விழி கலைப்பொக்கிசம் என்றேன்!
தாவிக்குதித்துக் காத்திருந்தாள் எனக்காக!
துள்ளிவரும் புள்ளிமான் என்றேன்!
தன்புன்னகையால் என்நகை இழக்கச்செய்தாள்!
திருமணம் செய்துகொண்டாள் வேறொருவனை!
ஓ,அவள் காதலித்தது என்னையல்லவாம்!
காதலெனுமந்த மாய லீலையைத்தானாம்!
காரணம் கேட்டால் தேமதுரக்கவியாமவள்!

 

 

 

படத்திற்கு நன்றி 

http://iloveyouforeverandaday.cz.cc/155/

 

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter 

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


6 + 9 =


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.