நழுவிச்செல்லும் காலம்..

சாந்தி மாரியப்பன்

ஆழ்நிலைக்கனவுகளொன்றில்

பிடிமானத்துக்காய்

துழாவிய கைகளில்

சிக்காது விளையாடுகின்றன;

எப்போதோ

நினைவடுக்ககத்தில் சேமிக்கப்பட்டிருந்த

பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருக்கும்

நினைவுகள்,

பெருங்கனவின் தணியாவெப்பத்தில்

காலாவதியாகுமுன்

காலம் நகர்த்திச்சென்ற

படகொன்றில்

துடுப்பசைத்துச்செல்கின்றன

தன்னையள்ளிக்கொள்ளும் இலக்கு தேடி..

படத்திற்கு நன்றி

சாந்தி மாரியப்பன்

எழுதவும், அதை விட வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறார்.

திண்ணை, வார்ப்பு, கீற்று,வல்லமை ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள் ஆகிய அச்சுப் பத்திரிகைகளிலும் அவருடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன.

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


8 + 7 =


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.