நஷ்டம் மட்டும் எனக்கா..?
- Sunday, August 29, 2010, 6:09
- கவிதைகள்
- 0 views
காயத்ரி
என் உள்ளக் கதறலை
யார் அறிவார்?
உச்சிக்கு மேலே அரிவாள்!
என் உதிரம் பிடிக்கப்
புவியின் மடியில்
கிண்ணம் – சில நொடியில்
நான் இறக்கப்போவது
திண்ணம்.
பலிபீடத்தில் எனை நிறுத்தி
எவனோ செய்கிறான்
நேர்த்தி!
மனிதா..!
கஷ்டம் தொலைந்தது
உனக்கு:
நஷ்டம் மட்டும் எனக்கா?
மூடனே!
வாழ்க்கை ஒரு வட்டம்:
வீழ்பவன் எழுவது
வாழ்வியல் திட்டம்!
மீண்டும் பிறப்பேன்
ஆணாக..!
உன்னை அறுப்பேன் ஆடாக..!
(காயத்ரி, கீழக்கரை, டிபிஏகே கல்லூரியில் ஆங்கில இலக்கியத் துறையில் 3ஆம் ஆண்டு மாணவி)
காயத்ரி சுப்ரமணியன்
ஜோதிடத்தை தன் பாரம்பரியமாகக் கொண்டவர் ஜோதிடர் திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன் . அவரின் தகப்பனாரும் குருவும் ஆகிய அமரர் ஜோதிடக் கடல் திரு எஸ். வைத்யநாதன் அவர்களின் வழி காட்டுதலே அவரை ஜோதிடத் துறைக்கு கொண்டு வந்தது என்கிறார் பூரிப்புடன். இவரது தகப்பனார் , ஜோதிடத்திலும், சமஸ்கிருதத்திலும் வல்லமை பெற்று, காஞ்சி மகாமுனிவரின் சமஸ்கிருத குருவாகத்திகழ்ந்த தண்டாங்கோரை திரு. சுப்பையா தீக்ஷதர் அவர்களின் வம்சாவழி வந்தவர் . ஜோதிடத்தின் புகழ் பரப்ப பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்த திரு எஸ். வைத்யநாதன் அவர்கள், திருச்சிராப்பள்ளியில். பத்தாண்டு காலம் ஜோதிடக் கடல் என்ற ஜோதிட பத்திரிக்கையும், ஜோதிட புத்தகங்களை வெளியிடுவதற்காக ஸ்ரீ பாதுகா பப்ளிகேஷன்ஸ்-யையும் நடத்தி வந்தவர் .
திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்,B.Sc. P.G.Dip. in journalism, சித்தாந்த ரத்னம்,சித்தாந்த நன்மணி
ஜோதிடர்,
எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
செல்:(0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com gayabala_astro@yahoo.co.in astrogayathri@rediffmail.com
http://www.vallamai.com/qa/11583/
Write a Comment [மறுமொழி இடவும்]
Excellent!