திறந்திருக்கிறது சாளரம்!

கீதா மதிவாணன்

பகல்களில் முட்டிமோதிய கதவது!
பலநூறு கனவுகளில் கண்டிருந்த நிகழ்வது!
இறுகிக்கிடந்ததை இறுகப்பற்றி
திறந்துவிட்டது சூறைக்காற்று!

பறந்துசெல்லும் வழியறிந்தும்,
பரந்த வானம் அழைத்தும்
சிறகசைக்க மனமின்றி
சிறைப்பட்ட சிற்றறைக்குள்,
சிதறடிக்கப்பட்ட தானியங்களில்,
சிந்தை லயித்து நிற்கும்…

இயல் மறந்த பறவையதற்கு
பறவையென்ற பெயரும் எதற்கு?
பக்கமிருக்கும் சிறகுகளும் எதற்கு?

 

படத்திற்கு நன்றி

கீதா மதிவாணன்

கீதா மதிவாணன்

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


2 × 7 =


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.