கவிதைகளின் காலம்
- Saturday, September 11, 2010, 22:54
- கவிதைகள்
- 0 views
- Add a comment
குமரி சு. நீலகண்டன்

”மா” பூ பூப்பதுபோல்
கவிதையின் காலங்களும்…
கவிதைகள் சில புளிக்கின்றன
இனிக்கின்றன
சில ஊறுகாயாய்
இலக்கியச் சோற்றுடன்
நாக்கை உரசிச் செல்கின்றன…
காலம் மாறி
பூத்த பூக்களும்
வண்டுகள்
வராத பூக்களும்
காற்றோடு
கரை கடந்த பூக்களும்
தரை விழுந்த பூக்களும்
வாடாத பூக்களுடன்
வாசம் பாடாத
பூக்களென
நிறைந்திருக்கிறது
இலக்கியத் தோட்டம்.


