கயல்விழி முத்துலெட்சுமி
அடுக்கு நிறைய மட்டும் வேண்டுமெனக்கு,
குளிக்க மறுப்பவன் முன்னால் எழுப்பச் சொல்லி
முறையிடுவான்.
காசைக் கரியாக்க ஆசையோடு,
அட்டவணையில் குறிப்பெடுப்போம்
வாழ்வினிமைக்கு வாழ்த்தி
மருந்தோடு வருவாள் ஆச்சி..
உனக்கெத்தனை? எனக்கெத்தனை?
பங்கிட்டோம் பட்டாசுகளை
சேர்ந்தே குதூகலிக்க,
வரிசை வரிசையாய் ஆசைகள்
கொளுத்தி வைத்து
பூக்கிண்ணமாய் சிதறிக் கொண்டிருந்தது.
பக்கத்திற்கொன்றாய்
தெறித்தப் பட்டாசாய்
வாழ்வைப்போன்ற இரட்டை நாக்கு
எவருக்குமில்லை..
நீங்களே அன்றொரு காலத்துக்குப் போய்விட்டீர்களா முத்துலக்ஷ்மி.
நாங்க பத்து ரூபாஉக்குப் பட்டாசு மத்தாப்பு வாங்கி மூணு நாள் வெடிப்போம்.
இப்பொழுது 300ரூபாய்க்கு வாங்கினாலும், எங்கவீட்டு உதவியாளரின் பேரன் பேத்திகளுக்கு ஒரு நாள் கூடத் தங்குவதில்லை.
காலம் மாறிப் போச்சு.
நினைவுகளை மீட்டெடுத்த அருமையான கவிதை. தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும்:)!
முத்துலக்ஷ்மி: பழைய ஞாபகங்களைத்தூண்டிவிட்டது உங்கள் கவிதை. நான் இப்போது தில்லியில் தான் இருக்கிறேன். தீபாவளி முடிந்து கிளம்புவேன். ஆசிகள்!
பாரதி மணி
அருமை.. அருமை… வாழ்த்துக்களும்…
வாழ்வைப்போன்ற இரட்டை நாக்கு
எவருக்குமில்லை..
அருமை.. ஆனால் தவிர்க்க முடியாத உண்மை.
நன்று…குளிக்க மறுப்பவன் முன்னால் எழுப்பச் சொல்லி
முறையிடுவான்.’நானும் முறையிட்டவன் அன்றொரு காலத்தில்… ‘
இன்று
பக்கத்திற்கொன்றாய்
தெறித்தப் பட்டாசாய்
வாழ்வைப்போன்ற இரட்டை நாக்கு
எவருக்குமில்லை..
>>>>>>>>>>>>
என்ன யதார்த்தமான வரிகளின் ஆழம். அருமை.