இரா.ச.இமலாதித்தன்
மனிதனாய் வாழ்வது கடினமாய் இருக்கிறது
இறைவனாகவே ஆகி விடவாயென்று
ஆகாய ஆதித்தனிடம்
ஏதோதோ கோரிக்கைகளோடு
மனங்களெல்லாம் வழிபட்டுக் கொண்டிருந்தது…
உழைப்பை பயிற்றுவித்து
உணவளித்த இறைவனுக்குக் கைம்மாறாய்
தையில் கொண்டாடப்படும்
வழிபாட்டுத் திருவிழாவில்…!
நிலவில் குடிபுகுந்தாலும்
நிலமும் உழவுமில்லாத
உணவு உனக்கில்லையென்று
மனதோடு மறுமொழிந்து
முதலில் நீ உயிரினமாய் இருக்க
முயற்சிக்க வாழ்த்துகளைச்
சொல்லி… Continue reading
இரா.ச.இமலாதித்தன்
இரு மாதங்களாகவே களை கட்டிய
திருவிழாக் கோலமெல்லாம்
இன்றோ வெறுமையாகக் கிடக்கின்றது…
நெரிசல் நிரம்பிய இரைச்சலின்றி
யாருமற்ற வீதியெங்கும்
தனிமையின் ஓலங்கள் வியாபித்திருந்தது…
சம்பளத்தேதிக்கு முன் வந்து போகும்
எந்தவொரு சுபவிழாக்களும்
இப்போதெல்லாம் சுணக்கமாகவே கடந்து போகின்றன…
மூன்று ரூபாய் தினசரி நாளிதழை
வாங்க முடியாததை அறியாமலேயே
தேநீரகத்திலும் முடிதிருத்தகத்திலும்
உலகப் பொருளாதாரத்தை விமர்சிப்பது… Continue reading
Recent Comments