- Monday, January 9, 2012, 16:51
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 2 views
முனைவர்.கி.காளைராசன்
அண்டபகிரண்ட நாயகனாம் பரமேசுவரனாம் சிவபெருமான், தன்திருநடனத்தை நாம் அனைவரும் காணும்படித் தில்லையில் ஆடுகிறான். கால்களில் வேதமாகிய சிலம்பும் வீரகண்டாமணியும் ஒலிக்கின்றன. இடையில் புலித்தோலைப் போர்த்தியும், பாம்பைக் கையில் கங்கணமாக அணிந்து கொண்டும், வலதுகையில் உடுக்கை ஒலித்து, இடதுகையில் நெருப்பை ஏந்தி, வலதுகையால் அருள்பாலித்து, இடது கையால் தன் திருவடியைக் காட்டி, கழுத்தில் விஷத்தை நிறுத்தியும், ஒரு காதில் குழை அணிந்தும் மறுகாதில் குண்டலம் அணிந்தும் அழகாக ஆடுகிறான். முகத்தில் புன்சிரிப்புடன், தலையில் கங்கையையும் அந்தி வெண்பிறையையும் ...
Full story
- Tuesday, November 22, 2011, 16:55
- home-lit, மின்னூல்கள்
- 0 views
கி.காளைராசன்
10. இந்நூலாசிரியரின் பிற கட்டுரைகள்
இந்நூல் ஆசிரியர் கி.காளைராசன் அவர்களது படைப்புகளை ஆன்மிகம், ஆன்மிக அறிவியல் மற்றும் திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
இவரது திருப்பூவணக் காசி என்ற முதல் நூல் திருப்பதி தேவஸ்தானத்தின் நிதியுதவி பெற்று அச்சிடப்பட்டு 24-09-2007 அன்று தவத்திரு குன்றக்குடிப் பொன்னம்பல அடிகளார் அவர்களால் திருப்பூவணநாதர் திருக்கோயிலில் வைத்து வெளியிடப்பெற்றது.
இவரது கட்டுரைகள் தினபூமி, தினமலர், மஞ்சரி, தமிழ் மாருதம், செந்தமிழ்ச் செல்வி, ஓம்சக்தி, மெய்கண்டார், கண்ணியம் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.
Full story
- Tuesday, November 22, 2011, 16:54
- மின்னூல்கள்
- 1 views
கி.காளைராசன்
49.திருவாலவாய்க் காண்டம்
(வங்கிய சேகர மன்னனுக்கு மதுரையின் எல்லைகளைக் காட்டுதல்)
சித்தரை மன்னன் பணிந்து வேண்டுதல்
2338 கறையணி கண்டனைத் தாழ்ந்து கைதொழு
திறையவ நின்னருள் வலியி னிந்நிலப்
பொறையது வாற்றுவேற்கு ஈண்டிப் போதொரு
குறையதுண் டாயினது என்று கூறுவான்
Full story
- Tuesday, November 22, 2011, 16:53
- மின்னூல்கள்
- 1 views
கி.காளைராசன்
6.3. சுந்தரர் பாடியது
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
திருவுடை யார்திரு மால ய னாலு
முருவுடை யாருமை யாளையொர் பாகம்
பரிவுடை யா ரடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யாருறை பூவண மீதோ. (1)
Full story
- Tuesday, November 22, 2011, 16:51
- மின்னூல்கள்
- 1 views
கி.காளைராசன்
தேவாரப் பாடல்
(குறிப்பு - தேவாரப் பாடல் வரிகள் திருப்பூவணப் புராணப் புத்தகத்திலிருந்தபடியே இங்கு அச்சிடப்பட்டுள்ளன)
6.1. திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியது
(1-ம் திருமுறை)
பண் தக்கேசி
திருச்சிற்றம்பலம்
அறையார் புனலு மாமலரு மாடர வார்சடைமேற்
குறையார் மதியஞ் சூடி மாதோர் கூறுடை யானிடமா
முறையான் முடிசேர் தென்னர் சேரர் சோழர் கடாம் வணங்குந்
திறையா ரொளிசேர் செம்மை யோங்கு தென்றிருப்பூவணமே (1)
Full story
- Tuesday, November 22, 2011, 16:49
- மின்னூல்கள்
- 1 views
கி.காளைராசன்
பத்தொன்பதவது
திருவிழாச்சருக்கம்
1330 எனநற்புராணமுனிசொற்றலோடுமெழுதாமறைச்சவுனகன்
புனிதந்தயங்குபுகழ்தங்குகங்கைபொதிசெஞ்சடைச்சங்கரன்
றினமன்புகூரமகிழுற்சவங்கொடிருநாள்புகுந்ததனைநீ
துணிநந்தவோதுகெனஞானநீடுதொழின்மேவுசூதன்மொழிவான்
Full story
- Tuesday, November 22, 2011, 11:48
- மின்னூல்கள்
- 1 views
கி.காளைராசன்
பதினாறாவது
சுச்சோதிபிதிர்களை முத்தியடைவித்த சருக்கம்
1232 பொங்கர்தொறுமங்குறவழ்பொழிறிகழும்பூவணத்திற்பொருந்திமன்னன்
றங்குகருமங்கண்முதற்றானிழைத்ததியாவையுநீ சாற்றுகென்னா
வெங்கொடுங்காமாதிகளை யொறுத்தொழித்தசவுனகன்றான்வினவலோடுந்
துங்கமறைவடித்தெடுத்ததூயவியாதனைநினைந்துசூதன்சொல்வான்
Full story
- Tuesday, November 22, 2011, 11:46
- மின்னூல்கள்
- 1 views
கி.காளைராசன்
பதினாலாவது
உமைவருசருக்கம்
1154 பூங்குழலுமைபின் பூவணந்தன்னிற்பொருந்தி நற்றவஞ்செயுமாறு
மோங்கியகாதலுவந்திடத்தானமுத்தமர்க்குதவிடுமாறுந்
தாங்கரும்வெகுளிதணந்திடுஞானச்சவுனககேளெனவருளிற்
றூங்கியேமிகுவெந்தீங்கெறிந்தோங்குஞ்சூதமாமுனிவரன்சொல்வான்
Full story
- Tuesday, November 22, 2011, 11:45
- மின்னூல்கள்
- 1 views
கி.காளைராசன்
பதின்மூன்றாவது
தக்கன் வேள்வியழித்தசருக்கம்
1088 மட்டவிழ்சரோருகனன்மைந்தன்மகிழ்கூர்ந்தாங்
கிட்டிபுரிகாதையையிசைப்பவதுகேண்மோ
கட்டழகுசேர்சவுனகத்தலைவவென்னாச்
சிட்டர்புகழ்சூதமுனிசெப்பியிடுகிற்பான்
Full story
- Tuesday, November 22, 2011, 11:42
- மின்னூல்கள்
- 1 views
கி.காளைராசன்
பன்னிரண்டாவது
திருக்கலியாணச்சருக்கம்
968 அருமறைநான்கையும் கத்தடைத்தசீர்
மருவியசவுனகமகிழ்ந்துகேண்மியா
பொருவிடைப்பாகனப்பொருவின்மங்கையைத்
திருமணஞ்செய்ததுசெப்புவாமரோ
Full story
- Tuesday, November 22, 2011, 11:37
- மின்னூல்கள்
- 1 views
கி.காளைராசன்
பதினோராவது
உமாதேவி திருவவதாரச்சருக்கம்
859 உற்றதிருமாலுடனியைந்ததையுரைத்தாய்
தற்பரமசத்தியவதாரமுரையென்னாக்
கற்றுணர்வுறுஞ்சவுனகன்கழறலோடும்
பொற்புறுபுராணமுநிபுங்கவனுரைத்தான்
Full story
- Monday, November 21, 2011, 15:39
- மின்னூல்கள்
- 1 views
கி.காளைராசன்
பத்தாவது
இலக்குமிசாபமோசனச்சருக்கம்
786 பான்மைசேருலகம்பரிந்துகாத்தளிக்கும் பகவனும்படர்சிறையளிசெந்
தேன்விருந்துண்ணுஞ் செய்யபூங்கோயிற்றிருவுமீங்குற்றதென்னெனலு
நான்மறைதினமுநாவிளையாடுநற்சவுனகமுனிகேளென்
றானனமலர்ந்தேயருந்தவத்துறைபோமழகியசூதன்பின்மொழிவான்
Full story
- Monday, November 21, 2011, 15:23
- மின்னூல்கள்
- 1 views
கி.காளைராசன்
ஒன்பதாவது
பிரமசாபமோசனச்சருக்கம்
694 ஆயுநான்மறையுமங்கமோராறுமாகியவமுதகானனநீர்
பாயுநாவுடையசவுநகமுநிவன்படுகலியுடைதிரைப்பரவை
மாயிருஞாலந்தன்னினீரொன்பான்மருவியபுராணமோர்வடிவாந்
தூயமாதவத்தின்றுறைபெறுஞானசூதனைநோக்கினன்சொல்வான்
Full story
- Monday, November 21, 2011, 15:17
- மின்னூல்கள்
- 1 views
கி.காளைராசன்
ஆறாவது
உற்பலாங்கி பதியை யடைந்த சருக்கம்
567 தற்பரத்துடன் றிகழ்சவுனகப்பெயர்
முற்றுணரருந்தவமுநிவகேட்டியாற்
சொற்றிடற்கரும்பரிசுத்தமேவிய
நற்கதைதன்னையாநவிற்றுவாமரோ
Full story
- Monday, November 21, 2011, 15:10
- மின்னூல்கள்
- 1 views
கி.காளைராசன்
மணிகன்னிகைச் சருக்கம்
407 நற்கதிபெறுந்திரணாசனன்கதை
யற்புதங்கேட்டுநெஞ்சமைதிகொண்டிலன்
சொற்றகுமாதவச்சூதயான்புகல்
கிற்பனாலின்னமுங்கேட்குமாசையால்
408 ஓதருமுலகிலாருயிர்கள் செய்திடு
பாதகமனைத்தையும் பாறல்செய்யுமக்
கோதறுமாமணிகுண்டமேன்மையை
யேதுவினோடெடுத்தியம்பல்வேண்டுமால்
409 உற்றமன்பதைக்குபகாரியாவது
மற்றுநீயல்லதிவ்வையத்தில்லையாற்
சொற்றிடென்வாய்மொழிதுணிந்துநாடியே
யிற்றெனவேவிரித்தினிதினாலரோ
410 என்றிவைசவுனகனியம்பக்கேட்டரு
டுன்றியதுகளறுசூதன்சொல்லுவான்
கன்றிடுமறுபகைகடிந்துநாடொறும்
வென்றிகொளந்தணர் வேந்தர் வேந்தனே
411 அத்தலப்பெருமையையாயிரம்பெரும்
பைத்தலையனந்தனும் பங்கயத்தனுஞ்
சித்திரமலர்த்திருமாலுந்தேவரு
மித்திறமெனவுணர்ந்தியம்பலாகுமோ
412 ஆயினெம்மாலிமூதறையப்பாலதோ
தாயினுமுயிர்க்கருள்சவுனகாதிப
தூயவாசான்றனாற் சொல்லுமந்தண
நேயமோடதிற்சிலநிகழ்த்துவாமரோ
413 அண்டமோர்விராட்புருடன்றனங்கமாம்
புண்டரீகத்திருப்பொருந்தும்பூவணங்
கொண்டபேரெழில்குடிகொண்டவன்முக
மண்டலமாகவேமறைந்துவைகுமால்
414 பண்டைநாளமுதகும்பத்திலாரமு
தெண்டகுமணிமயமாகியிப்புனல்
விண்டலநின்றதுவீழ்தலான்மணி
குண்டமென்றொருபெயர்கொண்டிலங்குமால்
415 துன்னுதற்கரியவத்தூயதீர்த்தமா
மன்னதினாடினோரமுதருந்தியே
பன்னுபத்தயன்றன்கற்பம்பரிந்துதாம்
பொன்னுலகத்தினிற்பொருந்திவாழ்குவார்
416 அரியயனுருத்திரனமரர்கோன்கடற்
றரைபுகழ்நாரதன்சனகனாதியர்
கருடர்கந்தருவர்நற்கபிலரேனையர்
திருமணிகன்னிகைத்தீர்த்தம்வாழ்வரால்
417 கோலமன்னுதீர்த்தமாடுகுலவுபூர்வமுகமதாய்
வாலுகந்தனான்மிகுந்தவானிலங்குவெய்யவன்
சீலமோடுசெய்யிலிங்கதெரிசனஞ்செய்வோர்கொடுங்
காலன்மேனிதானிரண்டுகண்கள் கொண்டுகண்டிடார்
418 அந்தலிங்கதரிசனத்தினானன்முத்தியடையுமால்
வந்துநாளுநாளுமேவணங்கினோர்கள்யாவரும்
புந்தியாற்செய்பாவமும்புண்ணியம்மதாகுமா
லிந்தநீர்மையுண்மையுண்மையென்பதையமில்லையே
419 எண்ணிறைந்தநன்மணிகனிகையினெய்தியாடுதல்
கண்ணினண்ணுபூவணக்காசிலிங்கதரிசனம்
புண்ணியம்புரிந்துளோர்தமக்குநேர்பொருந்திடும்
பண்ணுபாதகர்க்கொர்காலமும்பலித்திடாதரோ
420 இருடுரந்தருள்சுருக்குமிம்மணிகன்னிகைநதி
யருடவத்தினானதானமதனினாலுமன்புகூர்
கெரிசனத்தினாலுமிக்கசீர்தயங்குகங்கையின்
பரிசனத்தினாலும் வெய்யபாதகங்களழியுமால்
421 தெரியினரியபிரமகத்திதீர்க்குமுரியதரிசனம்
பரவுமமுதநாளுமுண்ணல்பண்ணுமேவுபரிசன
மரியபலமெலாமளிக்குமத்திருத்தநானமே
விரவுமமுதமணிமயங்கொண்மணிகனிகையின்மான்மியம்
422 தந்தைதாய்தமக்கிழைத்ததணிவில்பாதகங்களும்
பந்தமாற்றுகின்றதோர்பராபரன்றுரோகமுஞ்
சுந்தரங்கொள்வேறொர்மாதர்தோளணைந்ததோடமும்
முந்தையோரைநிந்தைசெய்தமுடிவிலாதபாவமும்
423 வேதியர்க்குவெகுளிசெய்தன்மிசைதலல்லமிசைதல்வெம்
பாதகங்கண்மாடபத்தியங்களாதிபாதக
மோதுகோள்களாதிபாவமொழியுமாலிப்பூவணந்
தீதிலன்பினோடுவந்துதெரிசனஞ்செயளவினில்
424 இத்தலத்தில்வைகியேயிடும்பையில்குடும்பியா
யுத்தமகுலத்தனாகியொற்கமிக்குடையனாய்
முத்திகாமனானசீவன்முத்தனங்கையிற்றில
மத்தனைச்செழும்பொனல்கினோர்பலத்தையறைகுவாம்
425 தூயவுலகினேமருவுசுகமெலாமடைந்தவ
ணேயபுத்திரர்புத்திரர்களோடுநீடுவாழ்ந்
தேயநற்சிவபுரத்தினேறியின்பமுற்றதின்
மேயநாளிருந்துமேதினிக்குவேந்தராவரால்
426 ஊனநீங்குமையர்கையிலுள்ளொருமையோடுகோ
தானநல்கினோர்கணீடுதரையிலின்பமருவியே
தீனமின்றிவாழ்ந்துபின்றிருந்தருந்தவத்தினா
லானகாமதேனுவின்றனமுகநன்கருந்துவார்
427 பின்னர்நற்றவந்தனிற்பெருங்குலத்துதித்துநேர்
பன்னுபுத்திரர்பவுத்திரர்களோடுபரிவினான்
மன்னுசெல்வமுடன்மகிழ்ந்துவாழ்ந்துமீண்டுமாசிலாச்
சின்மயன்றினம்பொருந்துசிவபுரத்தையடைகுவார்
428 ஓதுமுத்தராயணத்தினோடுதக்கிணாயன
மீதினுற்றகதிர்கடம்மைவெவ்வராவிழுங்குநாண்
மாதவுற்பவத்தினமதிவிரிந்தொடுங்குநா
ளாதிவாரம்பமூதொர்பக்கமவ்வெதிபாதத்தினம்
429 ஏலுமாறுதலையிலிட்டவெண்பமூதுசேர்ந்தநற்
காலமோடுசங்கிராந்திகாலமட்டமீதனின்
வாலசங்குதங்கிநன்குவளருமணிகன்னிகையினின்
மாலகந்தைகொன்றசூலவயிரவன்றனருளினால்
வேறு
430 இலகொளிபரப்புமெல்லோனெதிர்முகந்தரவிருந்து
மலருடன்றூர்வைமிக்கவண்கனிதண்டுலங்கொண்
டலகிலாப்பவங்கணாயேற்காடுமித்தீர்த்தந்தன்னாற்
றொலைவுசெய்தருளவேண்டுஞ்சோதியேயெனப்பணிந்து
431 சூரியவிலிங்கந்தன்னைச் சொல்லுமந்திரத்தினாலே
சீர்பெறச்செபித்துத்தேவதேவனைப்பிரார்த்தித்தன்பாற்
பேர்பெறுதீர்த்தமூழ்கிப்பிதிர்களோடிருடிகட்காங்
கேர்பெறுதர்ப்பணங்களிரவிமந்திரத்தினாலே
432 யாவனிம்முறையிற்செய்வானவன்கடலுடுத்தபார்மேற்
றேவர்கண்முனிவர்மிக்கதென்புலத்தவர்கடன்செய்
மேவியபிரமசாரியெனின்விருப்பறுத்தேயொல்லை
மூவுலகங்கள்போற்றமுத்தியையடைவனன்றே
433 அருமணமுடித்தோன்பின்றையைவகைவேள்வியாற்றிக்
கிரியைநூற்கிடக்கையானேகேடில்பூசனையமைத்தே
திருமகள்சுவர்க்கஞ்சேயாற்சேர்வனீதொருவினாலும்
பெருகுமத்தீர்த்தமூழ்கிற்பிதிர்கடன்றரும்பேறுண்டாம்
434 தீதிலாவேள்விசெய்தோன்றேவனாந்தன்மைபோல
வோதுமத்தீரத்தம்பொனுகவுவோனும்பனாவா
னாதலாலத்தலம்போலரும்பிதிர்கடன்கடம்மைப்
போதல்செய்தலங்களிந்தப்பூதலத்தில்லைமாதோ
435 இத்தலமன்றிவேறோரிருங்கதியளிக்குந்தான
மித்தலமதனிலின்றாமியம்பிடினாகையாலே
யித்தலமதிகமாமாயிரங்கோடிநற்றானத்து
ளித்தலங்கண்டாலிம்பரிருங்கதியிரண்டுமுண்டால்
436 கற்றுணர்வுடையோர்கண்டகண்ணிமைகைநொடித்தல்
பெற்றிடலமையுமேலும்பிறங்கிடுஞானந்தன்னா
லுற்றவஞ்ஞானந்தன்னாலோதுபூவணத்தில்வாழ்வோர்
நெற்றியிற்றிகழந்த வொற்றைநேத்திரராவரன்றே
437 நல்லதோர்தளிர்தானாதனவிலொருகனிதானாதல்
வில்லிலங்கியபுரூரமின்னிடையன்னைபாகம்
புல்லியபூவணத்தெம்புனிதனுக்கினிதளிப்போர்
சொல்லுருத்திரனாய்ப்பின்னர்ச்சுத்தமாமுத்திசேர்வார்
438 வோறொருதலத்தினின்று மெய்யுயிர்வியோகமெண்ணி
மாறிலாவித்தலத்தின்வைகுறின்மரணகாலை
கூறரிதாயசெம்பொற்கொடியிடைமடவாளோடுந்
தேறிடவந்தவன்றன்றெக்கிணகன்னந்தன்னில்
439 பாரிடைப்பிதாமகற்குப்பயப்பயப்பரிதல்போலச்
சீருடைக்கடவுடன்பொற்றிருமேனிசாத்திக்கொண்டு
பூரணமகிழ்ச்சியோடுபுத்திரன்றன்னைத்தேற்றித்
தாரகப்பிரமந்தன்னைத்தானுபதேசஞ்செய்வான்
440 சாற்றுதுமரன்றனாணைசத்தியமீதுசாற்றி
லாற்றல்சான்முனிவகேண்மோவாதலாலரிதினேனு
நாற்றிசையுலகமேத்துநற்றிருப்பூவணத்திற்
போற்றியேயெவரும்வாழ்கபுந்திகொண்டெந்தஞான்றும்
441 மருவியகாசிவாசமக்கண்மிக்குடல்வருந்தும்
பொருவிறென்பூவணந்தான்பொருந்திடாமெய்வருத்த
மரியனபொருளொன்றில்லையாதலாலைந்தவித்தீர்
கருதிலப்பூவணந்தான்காசியிலதிகமாகும்
442 பவமில்பஞ்சாமுதத்தாற்பஞ்சகவ்வியத்தான்மிக்க
சுவைதருநன்னீர்தன்னாற்சோதியையாட்டுவிப்போன்
சிவனதுவடிவமென்றேசெப்பிடுமுலகமெல்லா
மவனதுபெருமைதன்னையறிகுவனமலன்றானே
443 கதிர்விடுமணிகுண்டத்தின்கரையினிற்கடவுண்முன்னர்ப்
பிதிர்மகிழ்சிராத்தத்தோடும்பிண்டநற்றிலோதகத்தை
விதிமுறைபிதிர்கட்காற்றின்வெஞ்சுடர்ப்பரிதிவானோன்
மதிதருவாழ்நாள்காறுமனமிகமகிழ்ச்சியுண்டால்
444 பொங்குவெங்கதிர்பரப்பும்புனிதமாமணிகுண்டத்திற்
றங்குநீரிடைப்பிதிர்க்கடங்களங்கங்கிடந்தா
லங்கவர்மகிழ்ச்சிகூர்ந்தாங்கக்கணந்தன்னின்முக்க
ணெங்கணாயகனாற்பெற்றேயிடபவாகனத்தராவார்
445 ஆதலாலரியமைந்தரத்தியைப்பத்தியாலே
யோதிடும்பிதிர்கடாம்போயுயர்பதிகதியிற்சேர்வான்
காதலால்வருந்தியேனுங்கடைப்பிடிகருதிமாதோ
கோதிலாமணிகுண்டத்திற்கொண்டிடக்கடவரன்றே
446 முந்தொருகாலந்தன்னின்மொழியினோர்கங்கமங்கந்
தந்திடந்தணனங்கத்தைத்தசையெனநசையிற்கொண்டே
யந்தநற்றீர்த்தத்திட்டாங்ககன்றதக்கணத்தினன்னோ
னிந்தநற்றீர்த்தந்தன்னாலிருங்கதியேறினானால்
447 இந்தநற்றீர்த்தம்வேதத்தியம்பிடுஞ்சாரமாகு
மிந்தநற்பிறப்புக்கீறுசெய்திடுகடவுளாகு
மிந்தநற்கதைச்சுருக்கமியம்பினனீவிருந்தா
மிந்தநன்மாணக்கர்க்கிங்கிசைத்திடுமெந்தஞான்றும்
448 சந்தமாமறைதேர்கின்றசவுனகமுனிவகேண்மோ
வந்தநற்பிரமகைவர்த்தந்தருமத்தியாய
மிந்தவாறடைவிற்றேர்தியெழுபதின்மேலிரண்டாம்
புந்திகொள்புகழ்செறிந்தபூவணக்காதைமாதோ
வேறு
449 சேணுலாவியதிங்கடருங்குடைசேருமாமதன்றன்றனைவென்றதோ
ரேணுலாவியவின்பசுகம்பெறுமேசிலாவருடந்திடுமந்தணீர்
மாணுலாவியமண்டலமெண்டகுமாசிலாமணிகுண்டமடைந்தசீர்
பாணுலாவியசெஞ்சொல்பகர்ந்தவர்பாகசாதனன்றன்பதிதங்குவார்
மணிகன்னிகைச் சருக்க முற்றியது
ஆகச் செய்யுள் 449
*****
நாலாவது
துன்மனன்சருக்கம்
450 தூண்டுகின்றசெஞ்சுடர்கொள்சோதிதாள்
பூண்டவன்புசேர்பொற்பின்மேலையோன்
காண்டகுந்தவச் சூதன்கண்ணுறீஇ
மீண்டுமோர்கதைவிளம்பன்மேயினான்
451 வீரவேடனைவென்றசௌனக
வோர்கநீயிமூதுரைப்பக்கேட்டிடி
லாருயிர்க்கெலாமாயுணல்கிடுஞ்
சேரும்வல்வினையாவுந்தீர்க்குமால்
452 ...
Full story