அழைத்ததும் வந்து விடுவாயா … அம்மா
நினைத்ததும் அன்பு தருவாயா .
முறுவலில் முத்தமருள்வாயா அம்மா
மடியினில் இடம்தருவாயா ( ….)

சுமையென யெனை நினைத்தாயா இல்லை
சுகமென அகமகிழ்ந்தாயா
வலியினில் யெனை ஈன்றாயா அன்றி
கவியினில் தமிழ் கலந்தாயா (….)

மதியினில் ஒளி கலந்தாயா என்
மனதினில் அறம் பதித்தாயா
இரவிலும் கண்விழித்தாயா நான்
வரும்வரை புண்பொறுத்தாயா (…)

குயிலெனத் தினம் கிடைத்தாயா வேம்பு
கிளியென மொழிபெயர்த்தாயா
அமைதியை எனக்க ளித்தாயா தினம்
ஆற்றலில் இசை கோத்தெடுத்தாயா (…)

நெறிமுறை தனைச் சமைத்தாயா என்
செறிவினில் செழிப்படைந்தாயா
தன்னலம் தான் துறந்தாயா பிரிந்தே
விண்ணகம் தான் விரைந்தாயா (…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *