சென்னையில் பயங்கர இடி, மின்னல்
முந்தாநாள் (2021 ஜூன் 7, திங்கட்கிழமை அன்று) இரவு 10.45 மணி முதல் 12 மணி வரை சென்னையில் பயங்கரமான இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நீளமான இடியும் மின்னலும் தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தன. உச்சியை உலுக்கி, கிடுகிடுக்க வைக்கும் அந்த அசாதாரண நிகழ்வின் ஒரு பகுதி இங்குள்ளது. படக்கருவியை வான்நோக்கிப் பிடித்து, தரையைப் பார்த்தபடி இந்தக் காட்சிகள் பலவற்றையும் படம்பிடித்தேன். இதோ, நீங்களும் அந்த மெய்சிலிர்க்கும் அனுபவத்தைப் பெறுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)