சி. ஜெயபாரதன், கனடா

வையத்தில்
வாழ நினைப்போர் எல்லாம்
வாழ முடியாது,
தீராத நோயில், வலியில்
துடித்து,
நாராகக் கிழிந்து போவது,
கோரக் காட்சி !
கண்ணீர் சிந்தி, சிந்தி
இறைவனை
ஆரா திக்கும் போது,
காலன் வந்து
கதவருகே நிற்பான் !
பிரியும் நேரம்
வந்து விட்ட தென அறி !

உனக்குத் தனியாக
பிரமிட் ஒன்று
கட்டி எழுப்ப வேண்டுமா ?
கல் கோபுரம் கட்ட

எத்தனை ஆயிரம் அடிமைகள்
செத்தனரோ ?

பெரோ வேந்தர்,
பிளான் செய்தார் தமக்கு !
மீளாத

ஓய்வு உறக்கத்தில் தம்
உயிரற்ற உடலுக்கு
பெட்டிக்குள்
அடங்கிப் போய்,
பயணம்
முடிந்து போனது !
கறையான் தின்னாது,
காலம் விழுங்காது,
நாலாயிரம் ஆண்டுக்கு
முந்தைய
வரலாற்றை
பிரமிட் கல் கோபுரம்
எழுதியது.

செத்த அழகி
மும்தாஜ் நினைவுக்கோர்
தாஜ்மகால் !
எத்தனை அரிய
பளிங்குப் புதை மாளிகை !
சாக நினைப்பவர்
சாகலாம்!
வேக ஊர்தி உள்ளது !
மருத்துவர் உதவும் கனிவு
மருந்து.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *