அண்ணாகண்ணன்

உலகம் மாறவே இல்லை
என்பது உண்மை.
உலகம் அடியோடு மாறிவிட்டது
என்பதும் உண்மை.
இரண்டும் வெவ்வேறு உலகங்கள்.

பொழுது போகவில்லை
என்பார் ஒருவர்.
பொழுது பறக்கிறது
என்பார் அடுத்தவர்.
இரண்டும் சரி.
இருவரின் பொழுதுகளும் வெவ்வேறு.

அட,
ஒரே ஆளே
கடந்த நொடியில் ஒருவராகவும்
இந்த நொடியில் இன்னொருவராகவும்
இருக்கிறாரே!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அட!

  1. வணக்கம்! வல்லமைக்கு வாழ்த்துக்கள்!

    இந்தப் பத்துவரிகளில் கவிதை இருக்கிறதா? இருக்கிறது! சரி! எங்கே இருக்கிறது?
    இங்கே இருக்கிறது!
    ‘’இருவரின் பொழுதுகளும் வெவ்வேறு”
    இங்கேதான் கவிதை இருக்கிறது என்பது படைப்பாளனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
    கவிதை படைபபாளனிடமிருந்துதான் பிறக்கிறது!
    அது எங்கே இருக்கிறது என்பது பெரும்பாலும் அவனுக்குத் தெரிவதில்லை!
    காரணம்
    அவன் உலகம் அப்படி!
    மாறா அன்புடன்
    ச.சுப்பிரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *