நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (9)
தி.சுபாஷிணி
தூமணி மாடத்து துயில்கொண் டிருப்பவளே!
தூயோமாய் வந்துன் வாசற்கடை நிற்கின்றோம்!
துள்ளி ஓடும் வெள்ளை மேகங்கள்!
எள்ளாது எங்கள்நிலை எடுத்து ரைப்பீர்காள்!
எண்ணம் செயலனைத்தும் அண்ணலுக் கேயென
சரணாகதி எய்திய அம்மையே! ஆண்டாளே!
தள்ளாது தாழ்திறக்க எழுவாய் நாச்சியாரே!
படத்திற்கு நன்றி : http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=azhvar_sujatha_andal