நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (25)
தி.சுபாஷிணி
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல்கடைந்த இன்னமுதம் வேண்டா வென்றே
மருப்பொசித்த மாதவன்தன் வாயமுதமும் வாசமும்
விருப்புற்றே தானுண்டு மயங்கிக் கிடத்தியோ!
திருவில்லிப் புத்தூர் திருவரங்க நாதா!
தருவாயா சற்றே! எழுவாய்நீ நாச்சியாரே!
படத்திற்கு நன்றி
http://photofeature.divyadesam.com/thiru-aadi-pooram-2011/sri-andal-srivilliputhoor-temple-2.shtml