யாழினி முனுசாமி

நதியின் அடியாழத்தில் இரகசியமாய்ப்
பதிந்து கிடக்கும் சிறு கூழாங்கல்லில்
வளி நிரப்பினேன்.
பெரும்பலூனாய் மேலெழும்பித்
தத்தளித்துக் கொண்டிருக்கிறது அலையில்.
ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்
ஒப்படைக்க அருகில் நெருங்கினால்
மீண்டும் கூழாங்கல்லாகி
அடியாழத்தில் பதிந்துவிடுகிறது. 

 

படத்திற்கு நன்றி: http://servantoftheservant-ananda.blogspot.com/2011/09/floating-stones-at-rama-kund-in.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *