நேர்மையான வாழ்க்கை
விஜய குமார். A
நறுக்…. துணுக்….. (15)
நம் நாட்டுக் கலாச்சாரத்தில் நேர்மையான வாழ்க்கை என்பது ஒரு கடினமான காரியமாக உள்ளது. நான் நெல்லிக்குப்பம் டேனிஷ் மிச்சியன் மேல்நிலைப் பள்ளியல் படிக்கும் பொழுது கணிதவியல் ஆசிரியர் எங்களுக்கு கணிதத் தேர்வு வைக்கும் முன் எங்களிடம் இப்படிக் கூறுவர் ” நீங்கள் இன்றைக்கு இரு தேர்வு எழுதப் போகிறீர்கள் ஒன்று கணிதவியல் மற்றொன்று உங்கள் நேர்மை பற்றிய தேர்வு நீங்கள் இரண்டிலும் வெற்றி பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை நீங்கள் எதாவது ஒன்றில் தோல்வி அடைவீர்கள் என்றால் அது கணிதவியல் பாடமாக இருக்கட்டும் ” நேர்மையில் வெற்றி பெறாத எந்த ஒரு மாணவனும் நல்ல மாணவனாக இருக்க முடியாது என்பார்.