கவிநயா

 

சக்தி நீயின்றி எதுவும் இல்லை!
சக்தி நீதானே உலகின் எல்லை!

அன்னை தன் வடிவாய் உன்னைப் படைத்தாள்!
அன்பின் வடிவாய் உன்னை வடித்தாள்!
உயிரைத் தாங்கும் உரிமை தந்தாள்!
அகிலம் ஆக்கும் ஆற்றல் தந்தாள்!
அம்மா என்றுனை அழைக்கச் செய்தாள்!
அன்பால் உலகுனைத் துதிக்கச் செய்தாள்!

சக்தியும் நீயே! சகலமும் நீயே!
வித்தும் நீயே! விளைவும் நீயே!

அச்சமே யின்றி அநீதி எதிர்ப்பாய்!
துச்சம் நீயென எதிரியை அழிப்பாய்!
நல்ல சக்திகளை வளர்ப்பதுன் கடமை!
தீய சக்திகளை தீர்ப்பதுன் திறமை!
சக்தியை உணர்ந்து செயல்படுவாய்!
சகத்தினை நீயே காத்திடுவாய்!

சக்தி நீயின்றி எதுவும் இல்லை!
சக்தி நீதானே உலகின் எல்லை!!

 

படத்திற்கு நன்றி : http://photobucket.com/images/women%20power/

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *