சென்னையில், இன்ட்லி வலைப் பதிவர்கள் கலந்துரையாடல் நிகழ்வு- 11-03-2012

0

 

சீராசை சேதுபாலா

ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் ஒரு மணி முதல் ஐந்து மணி வரை நடந்தது. எங்கே? எத்திராஜ் சாலையில் உள்ள பிரசிடென்சி கிளப்பில் ஓர் குளு குளு அறையில்!

பதிவர்கள் தன்னிச்சையாக ஏற்பாடு செய்யும் கூட்டமல்ல இது என்பது மிகவும் முக்கியம். இன்ட்லி நிர்வாகிகளின் அனுமதி பெற்று அதன் பதிவர்கள் யார் வேண்டுமாயினும் இது போன்ற கூட்டத்தை நடத்த முடியும். அவர்கள் இந்த ஊரில் இன்ன நேரத்தில் இன்ன இடத்தில் இன்னார் கூட்டத்த ஏற்பாடு செய்துள்ளார்கள், விரும்புவோர் முன் பதிவு செய்திடல் அவசியம் என்ற அறிவிப்பினைச் செய்வர். 50 பேருக்கு மட்டுமே அனுமதி.

அது போன்ற முறையானதொரு கூட்டத்தை, உறுப்பினர் சசிதர் மேற்கண்ட இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார். பிரட் சாலட், போண்டா, காப்பி, டீ, ஏற்பாடுகள் கூட்டத்தைக் களை கட்டச் செய்தது.

பல்வேறு நிர்வாகத் துணக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றின் பொறுப்புகளும் வரையறுக்கப்பட்டன. கூட்டம் ஆங்கிலத்தில் தான் பெரும்பாலும் நடந்தது. ஏனெனில், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் வலைப்பூ பதிவர்களே அதிகம் பங்கேற்றனர்.

சீராசை சேது பாலாவா மட்டும் தான் தமிழ்ப் பதிவர் என்று கருதுகின்றேன். என்.இராமசாமி என்பவர் போட்டோக்களுக்காக மட்டுமே வலைப்பூ நடத்துகின்றார். குழுக்களின் செயல் திட்ட அறிக்கை அடுத்த மாதக் கூட்டத்தில் தாக்கல் செய்யப் படும் என்று, அமைப்பாளர் தகவல் அனுப்பியுள்ளார்

தமிழ் வலைப்பதிவர்களை ஐக்கியப்படுத்தும் பணி சீராசை சேதுபாலாவான எனக்கு வழங்கப்ப்பட்டுள்ளது. ( co-ordineter for tamil ) .

கருத்துப் பரிமாற்றங்களும், அனுபவப் பகிர்வுகளும் நன்றாக இருந்தன.

கல்லூரியில் உள்ள பெண்கள், பெருங் கூட்டமாக ஒரு திரையரங்கத்திற்குச் சென்று, ஒவ்வொரு இருக்கையிலும் தேடிப் பார்த்து தொலைந்து போன ஒரு பெண்ணைத் தேடி மீட்டு வந்த உண்மைக் கதையைச் சொன்னபோது அத்தனைபேருமே கர ஒலி எழுப்பினர்.அந்தப் பெண்ணை மீட்டுவரப் போராடிய, பெண்களைத் திரட்டிய வீரமங்கையைப் பாராட்டினர்.

ஒவ்வொரு பிரிவிலும் பங்கேற்று தமிழில் பேசி, எனது கருத்துகளையும், சிறப்புத் தகவல்களையும் கொடுத்து வந்தேன்.
,
வின்மணி நாள் தோறும் புதிய புதிய கணினித் தொழில் நுட்பங்களைப்பற்றிச் சொல்லும் இணைய தளங்களை தமிழில் அறிமுகப் படுத்துவதையும் குறிப்பிட்டார். மேலும் வின்மணியார், நாளொரு தேசியத் தலைவரையும், சில ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் வார்த்தைகளையும் குறிப்பிடுவதோடு, தினமும் ஒரு தமிழ் புத்தகத்தையும் முழுமையாகத் தரவிரக்கிக் கொள்ளும் வசதி உளளதையும் குறிப்பிட்டார். இன்றளவும் 450-க்கும் மேற்பட்ட புத்தகஙகள் வின்மணியில் உள்ளன. ( winmani. wordpress.com )

கோவில்களில் காணப்படும் யாளிகளைப் பற்றியும் குறிப்பிட்டார். அது குறித்த சிந்தனையோடு எழுதப்பட்ட யாளி நவீன நாவலை , நாகர் கோவிலைச் சேர்ந்த மணி தணிகை குமார் எழுதியுள்ளதையும், மலேஷியாவில் இரண்டாண்டுகளுக்கொரு முறை தரப்படும், தான்ஸ்ரீ சோமா புத்தகப் பரிசிற்கான போட்டிக்கு யாளி -நாவல் அனுப்புவிக்கப்பட்டுள்ள தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

தான்ஸ்ரீ சோமா பரிசுத் தொகை 10000 அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் 500000 ரூபாய். ஈராண்டுகளுக்கொரு முறை மலேஷியாவில் உள்ள தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் வழங்குகின்றது. ஜனவரி 15 முதல் ஏப்ரல் 16, 2012 -க்குள் அனுப்புவிக்கப்படவேண்டும். 2010.-2011 ஆம் ஆண்டுகளில் வெளிவந்தவையாக இருத்தல் அவசியம்.

உலகளாவிய சிறந்த தமிழ் நூல்களுக்கான போட்டி இது. இந்தியப் பிரதிநிதி, கலைஞன் பதிப்பகம், சென்னை-17. விண்ணப்ப படிவம் கேட்டால் கிடைக்கும் அதிலேயே முழு விபரங்களும் உள்ளன. விருபா.காமிலும் சட்டதிட்டங்கள், மற்றும் விண்ணப்பப் படிவத்தினைத் தரவிறக்கிக் கொள்ளும் வசதிகள் உள்ளன என்ற சிறப்புத் தகவலையும் குறிப்பிடடார்..

சீன மொழியிலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழியாக்கம் செய்யப்பட்ட அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் டெல்லியில் வெளியிட்ட தகவலைச் சொன்னார்.

லயன் சீனிவாசன் எழுதியுள்ள செங்கிஸ்கான் நூலினைப் பற்றியும் சிறப்பாகக் குறிப்பிட்டார். இதனைப் படித்தால் நாடி நரம்புகளில் முறுக்கேறும் என்றார்.

கிடைக்குமிடம் கண்ணதாசன் பதிப்பகம் விலைரூபாய் 110/- 044 24332662. kannadhasanpathippagam@gmail.com www.kannadasanpathippagam.com

சிரிப்பானந்தா என்பவர் தனது அன்பிற்கினிய நண்பர் என்றும், அவர் தமிழகம் முழுவதும்,சித்திரை சிஙகர் என்ற உதவியாளருடன் பயணித்துச் சிரிப்பு தெரபி அளித்து வருவதையும், விரைவில் கின்னஸ் ரிகார்டு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

சம்பத் என்கின்ற சிரிப்பானந்தா சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது என்று எல்லோரையும் எப்பொழும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் சிரிப்பானந்தாக்கள் தமிழ் நாட்டில் பெருக வேண்டும் .அப்பொழுதான் மன நல மருத்துவ்ர்களின் எண்ணிக்கை குறையும். என்றும் குறிப்பிட்டார்.

வந்த வலைப்பதிவர்கள் பட்டியலையும், அவர்களது வலைப்பூ விபரங்களையும் எல்லோருக்கும் அனுப்பி வைப்பார் அமைப்பாளர். ஒவ்வொரு பதிவாளரும், AESTHFTICS, CONTENT, PRESENTATION, FEEL ஆகியவற்றக் கொண்டு மூன்று வலைப்பூக்களை வரிசைப்படுத்திட வேண்டும். தனது சொந்த வலைப்பூவை மூன்றினுள் ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இப்படியாக 3 வலைப்பதிவாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த கூட்டத்தில் சிறந்த வலைப்பதிவராக அறிவிக்கப்பட்டார் என்பதும் ஒரு தகவல்.

மூன்று தர வரிசைப் பட்டியலினுள் rssairam . blogspot .com என்ற வலைப்பூவிற்கும் தனி இடம் கிடைப்பது உறுதி. * சுய புராணம் )

ஒரே ஒரு பத்திரிக்கை இந்தியாவில் 21 பதிப்புக்களுடன் தன்னை நிறுத்திக் கொண்டது அந்த பத்திரிக்கையின் பெயர் என்ன ? நினைவூட்டிட, அந்த இதழ் ஆங்கிலம்,இந்தி, மலையாளம் என்ற மூன்று மொழிகளில் வெளி வந்தது

சுவையான இந்த வினாவிற்கு பல பேரிடமிருந்து ஒரெ நேரத்தில் பதில் வந்தது தனிச் சிறப்பு. என்ன பதில் அது?

INDIYA AT HER BEST என்பதுதான் அந்தப் பதில். மேற்கொண்டு இந்த இதழைப் பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன. தெரிந்தோர் தெரிவிக்கலாம் வல்லமையில்!

நானும் கேள்வி கேட்டுப் பதிலும் சொன்னேன்.

தமிழகத்தில் எததனையோ மாவட்ட ஆட்சியர் மட்டும் உள்ளனர், ஒருவர் மட்டும் அண்மையில் பத்து இளைஞர்களுக்குப் படியளந்துள்ளார் . யார் அவர் ? என்ன செய்தார்?

மதுரை மாவட்ட ஆட்சியர் தேவ சகாயம். செய்த சிறந்த செயல் :- இலங்கை அகதிகளில் உள்ள படிதத பத்து பேரைத் தேர்ந்தெடுத்தார். அழைத்துப் பேசினார். bbo ஒன்றை உருவாக்கினார். அனுமதித்த தொகை 10 லட்சம். செண்டர் இயங்குமிடம் மதுரையை அடுத்த ஆனையூரில் உள்ள லயன்ஸ் கிளப் கட்டிடம் . விரைவில் சொந்தக் கட்டிடத்திற்கும் மாற்ற்டவும் வாக்களித்துள்ளார். சகாயத்திற்கு உள்ள சகாய உள்ளம் இதர ஆட்சியாளர்களுக்கு இல்லையே, ஏன்?

இண்ட்லி வலைப்பூ குழு எல்லா மாவட்ட ஆட்சியருக்கும் வேண்டு கோள் மனு அனுப்பும் வெகு விரைவில்.

வல்லமை வாசகர்களுக்கு ஒரு கேள்வி.

ஒரு பெண்மனியின் வயது 92. வருகின்ற அக்டோபர் மாதத்தில் 93 வயதை எய்துகின்றார். பிரிட்டிஷ் வம்சாவழி. பிற்ந்ததோ இன்றைய ஈரானில் அந்தக் காலத்தில்! வாழ்ந்ததோ இன்றைய ஜிம்ப்பாபெயின் அந்தக்காலத்துப் பெயர் உள்ள நாட்களில். இரு கணவ்ர்கள் வாழ்க்கை சிறக்கவில்லை. இரண்டாவது கணவன் மூலம் பிறந்த மகனுடன் லண்டனில் குடியேறுகின்றார். எழுதாத நூலில்லை. பெற்றிடாத பரிசுகள் இல்லை. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற அவரது இன்றைய வயது 92. ஒரு தமிழ் வலைப்பூ பதிவரிடம் சிக்கிக்கொண்டார். பிறந்தது, கட்டுரை, யார் இந்தப் ஆப்பிரிக்கப் பேரழ்கி ? அவரது வலைப் பதிவு மூலமும் தமிழில் உலகை வலம் வருகின்றார்.

கன்னிக் கோவில் ராஜா – வலைப்பதிவர்களை ஐக்கியப்படுத்தும் – வலைப்பதிவர்களை நிகழ்விலும் பங்கேற்று தமிழில் பேசி, ஒவ்வொரு பிரிவிலும் பங்கேற்று தமிழில் பேசி அறிமுகப்படுத்தி வருவதையும் குறிப்பிட்டார்.

தான்ஸ்ரீ ப்சோமா புத்தகப் பரிசிற்கான போட்டிக்கு – தான்ஸ்ரீ சோமா நல்ல தமிழ்ப் புத்தகங்களுக்கான பரிசுப் போட்டிக்கான நிதி கூட்டுறவு சங்கம் வழங்கி வருகின்றது, 1960-ம் ஆண்டு முதல்!

தரவிறக்கிக் கொள்ளும் வசதியும் உண்டு என்ற சிறப்புத் தகவலையும் பகிர்ந்து கொண்டார். உலகம் சுற்றி வரும் ஸ்ரீதர்: தற்போது வசித்து வருவது, டெல்லியில்!
வெளியிட்ட நூல்கள் . பத்திரிக்கை செய்தியில் இரண்டென்றாலும் நண்பர், யாளி நாவலின் படைப்பாளி, நாகர் கோவிலில் இருந்து வாங்கியனுப்பியது ஒரே ஒரு புத்தகம்தான். ஏனெனில், அங்கேயே சரியான தகவலைச் சொல்லும் நபர்கள் இல்லை. கிடைத்த புத்தகம், சீனாவின் சஙக இலக்கியம், பெயர் – கவித் தொகை. வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை என்ற தலைப்பும் உள்ளது. அறிமுகமும் நேரடித் தமிழாக்கமும் என்ற குறிப்பும் உள்ளது. கிடைத்த அன்று இரவே தனது வலைப்பூவில் அறிமுகப்படுத்தும் விதமாகப் பதிவு செய்ததையும் குறிப்பிட்டார்

பாடம் ஆசிரியர் நாராயணன், ஒவ்வொரு இதழிலும் ஏதாவதொரு வித்தியாசமான செய்திகளை இடம் பெறச் செய்து விடுவார். அதே போன்று மது-நாட்டுக்கு வீட்டுக்கு, உயிருக்குக் கேடு என்னும் தலைப்பில்,13 பக்கங்களில், சாராயப் பொருட்களின் பெயர், விலைப் பட்டியல், அவற்றை வாங்குவதால் கிடைக்கும் இலவசப் பரிசு ஆகியவற்றினைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.

”இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே” என்றச் பழைய திரைப்பாடலின் வரிகள் சாராய விற்பனக்கும் மிகவும் பொருந்தும்.

இலவசங்களைப் பெற்றிட, இலவசங்களுக்கான மூலதனத்தை அரசுக்கு வழங்கிடவும் வரிசையில் நின்றிடும் மாந்தர்தம் அவல நிலையை எடுத்து விளங்குவதும் எளிய காரியமோ?

இன்னோரன்ன பல நல்ல கருத்துக்களடங்கிய பாடம் மத இதழ் அனைத்து வலைப் பதிவாளர்களுக்கும் இலவசமாக வழங்கப் பெற்றது. பாடம் ஆசிரியர், அ.நாராயணன் அவர்களின் கருணைத் திறத்தால்! .

www.paadam.in இணைய தளத்திலும் பாடம் படிக்கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *