மரணம்
ஜெ.ராஜ்குமார்
வெட்டி வெட்டி
எடுத்த நிலவு
ஒருநாள்-
முழுதும் காணாமல் போகும்!
அமாவாசை அன்று.
அது போல்
மனிதன் வளர வளர
ஒரு நாள்
திடீரென்று காணாமல் போகிறான்!
மரணத்தின் பிடியில்.
நிலவு காணாமல் போன
இருளை விட
மனிதன் காணாமல் போன
மரணம் கொடியது !
படத்திற்கு நன்றி:http://www.free-hdwallpapers.com/wallpaper/space/half-moon/49336