சுயநலத்தின் சுற்றுப் பாதை
குமரி எஸ். நீலகண்டன்
ஓடும் பேருந்தில்
தொங்கியும் சாய்ந்தும்
சரிந்தும் வியர்த்தும்
காற்றைப் பிழிந்து
வியர்வை மிதந்த
கனத்த கூட்டத்தில்
இருக்கையை விட்டு
எழுவதுபோல் எத்தனிக்கும்
அவனைச் சுற்றி
மந்தையாய்க் குவியும்
சுயநலம்.
அந்த இடத்தைப் பிடிக்க
கைகள், கம்பிகளைப் பற்ற
வாள்களாகச்
சண்டையிடும்.
அவனின் பாவனை அசைவில்
நிற்பவர்களின் ரத்தம்
ஒடுங்கிய ஓடைகளில்
உயர் அழுத்தத்தில் பாயும்.
அவன் எழாத போது
பெய்யா மழையால்
பொய்யாய்க் கலையும்
கரு மேகமாய்
அலைபாயும் அடுத்த
இடத்திற்காய், சுயநலம்.
மிகுந்த அவதானிப்புடன் எழுதப்பட்ட அருமையான கவிதை.