நாயகனாக.. நாயகியாக..
யுகநிதி, மேட்டுப்பாளையம்
வானவீதியில்
சிறகடிக்க வேண்டுமா..
வண்ணம் குழைத்த
வானவில்லில்
நடந்திட வேண்டுமா..
ஆயிரம்
பட்டாம் பூச்சிகள்
உள்ளத்தில்
படபடக்க வேண்டுமா..
மின்சாரத்தை
தொடாமலேயே
உனக்குள்
உணர வேண்டுமா..
இனம் புரியாத
சுகவேதனையில்
உறக்கமிழந்து
தவித்திட வேண்டுமா..
பார்ப்பதெல்லாம்
அழகு வடிவாக..
இந்த உலகமே
பூப்பந்தாக..
எண்ணி மகிழும்
இளமை வேண்டுமா..
எப்படித்தான்
இருந்தாலும்
நாயகனாக.. நாயகியாக..
வீதிகளில்
உலா வர வேண்டுமா..
காதலித்துப் பார்..!
========================
படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா
இக் கவிதைக்காகவே காதலிக்கலாம்
superbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb