மூத்த பத்திரிக்கையாளர் – எழுத்தாளர் சோலை மரணம்

0

 

எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான 82 வயதான, திரு.சோலை, சென்ற செவ்வாய் (மே, 28, 2012) இரவு சென்னையில் காலமானார்.

திண்டுக்கல் அருகேயுள்ள அய்யம்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் சோலையின் இயற்பெயர் கே.சோமசுந்தரம். பல்வேறு பத்திரிகைகளிலும், வார இதழ்களிலும் பணியாற்றியவர் இவர். கடந்த 2 மாதமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சென்னை தாம்பரத்தையடுத்த பெருங்களத்தூர், தொல்காப்பியர் தெருவில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்த சோலை, செவ்வாயன்று இரவு 8.25 மணிக்கு காலமானார்.

மறைந்த எழுத்தாளர் சோலைக்கு, சரோஜா என்ற மனைவியும், 3 மகன்கள், இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்களுக்கு வல்லமை மின்னிதழ் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *