ஜெயஸ்ரீ ஷங்கர்
                
காமதேனு சுரந்த அமுதெனக்
குறள் பால்  ஈந்த வள்ளுவன்…
விண்  வரை எட்டிய புகழை..
மண்ணிலே குறள் ஒலியாய்..
திருப்பித தந்த திருவள்ளுவர்..!
 
ஈரடிக்குள் எளிமையை  சமைத்து
வாழும் கலையை அதற்குள்  பொதித்து
முப்பாலும் மயங்கும் ஞானப்பாலாம்
முதுமைக்கும் கூடக் கைத்தடியாம்…!

எட்டுத் திக்கு விரிந்த தாமரையாம்…
மறைகள் போற்றும் நிறை புலவனவன்
ஏழே வார்த்தையில்  ஈரேழுலகை
சுருக்கி  மனத்துள் திணித்தவர்..

வரம் பெற்றுப் பிறந்தவர்….இறவா…
வரம் பெற்று வாழும்…இறைவனார்..
தேன் சுவை அறியா தேனீயாய்
பொற்கிழியை தானம் செய்தாயோ..

யுகங்கள்  கடந்தாலும் உந்தன்
திருமுகம் குறளின்  விலாசமே..
ஜென்மங்கள் பல கடந்து நிற்கும்
திருக்குறளுக்கு அதுவே ஆதாரமே.

படத்துக்கு நன்றி

http://www.pbase.com/image/26367817

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தெய்வப் புலவர் திருவள்ளுவர்..

  1. அருமையான படத்துடன் என் கவிதையை வல்லமையில்
    பார்க்க சந்தோஷமாக இருந்தது. வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.,
    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *