செண்பக ஜெகதீசன்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும்,
திருமணத்தில்
செலுத்தவேண்டிவருகிறதே
சொக்கத் தங்கமும்
செலவுக்குப் பணமும்…
ஓ,
சொர்க்கத்துக்கும் இப்போது
செலுத்தவேண்டுமோ
நுழைவுக் கட்டணம்…!
நாசமாய்ப் போக..
நரகமே போதும்…!
ப்டத்துக்கு நன்றி
http://www.hellhappens.com/pictures-of-hell.htm
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…
நம்முர் மனிதர்கள் நரகத்திலும் இருப்பார்களல்லவா…அவர்கள் நரகத்தையும் என்ன கதி ஆக்கி வைத்திருக்கிறார்களோ…?