ஞானாலயா ஆய்வு நூலகம் – புதுக்கோட்டை

0

 

அறிஞர்களின் அறிஞர் மு.அருணாசலம்!

 

மு. அருணாசலம் – தமிழ் இசை இலக்கிய, இலக்கண வரலாற்று நூல்கள்

 

 

 

 

ஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் தேவை என்ற செய்தியை முன்வைத்து கூகிள் ப்ளஸ்சிலும், ஞானாலயாவுக்கான வலைப்பூவிலும் இயங்கி வருகிற இந்த ஐந்து மாதங்களில்,நிறைய அனுபவங்கள், தொடர்புகள்! சென்ற வெள்ளிக்கிழமை (07/09/2012) மதுரை  அமெரிக்கன் கல்லூரியில் கல்லூரித் தமிழ்த்துறையும் சந்தியா பதிப்பகமும் இணைந்து எழுத்தாளர் வண்ணதாசன் தன்னுடைய பதினேழாம் வயதில் (1962 April) எழுத ஆரம்பித்து ஐம்பதாண்டுகள் பூர்த்தியானதற்காக ஒரு விழா எடுத்தார்கள்.அதற்காக மதுரை வந்திருந்த ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி  ஐயா எனக்கு அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் திரு உல.பாலசுப்ரமணியன் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்..

பதிப்புத்துறையில் பழம் தின்று கொட்டைபோட்டவர்களே முன்னெடுக்கத்  தயங்கும் ஒரு சாதனையை இந்த இளைஞர் சாதித்திருக்கிறார்!

உண்மை!  அறிஞர்களுக்கெல்லாம் அறிஞர் என்று கொண்டாடப்படும் திரு மு.அருணாசலம் அவர்களின் படைப்புக்களில்  மிக முக்கியமான நூல்களான தமிழ் இசை இலக்கிய வரலாறு, தமிழ் இசை இலக்கண வரலாறு ஆகிய இரண்டையும் தன்னுடைய சொந்த செலவில் பதிப்பித்திருக்கிறார்.இரண்டு தொகுதிகளும் சேர்ந்து ரூ.1200/-

சென்ற டிசம்பரில், தினமணி ஆசிரியர் இந்த வாரம் கலாரசிகன் பகுதியில் எழுதிய இந்தப் புத்தகங்களைக் குறித்த அறிமுகம் இங்கே  

கடந்த பிப்ரவரி மாதம் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி ஹிந்து நாளிதழில் இந்தப் புத்தகங்களுக்கு எழுதிய மதிப்புரை இங்கே  

“அறிஞர் மு.அருணாசலம் பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாக வெளியிட்டுப் புகழ்பெற்றவர்.அன்னாரின் நூல்கள் சான்றாதாரங்களாக விளங்கும் தரத்தன.அவர் தமிழிசை இலக்கிய வரலாறு,தமிழிசை இலக்கண வரலாறு என்னும் இருநூல்களை எழுதி வெளியிடாமல் கையெழுத்துப் படியாக வைத்தவண்ணம் இயற்கை எய்தினார்.மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் உல.பாலசுப்பிரமணியன் அவர்கள் இந்தக் கையெழுத்துப்படிகளை அரிதின் முயன்று வெளிக்கொண்டு வந்துள்ளார். நூலுருவம் தாங்கியதால் உலகத் தமிழர்கள் அனைவரும் பயன்பெற முடியும்.இத்தகு அரிய பணியில் ஈடுபட்ட முனைவர் உல.பாலசுப்பிரமணியன் அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன்”
என்கிறார் முனைவர் மு. இளங்கோவன் 

அதெல்லாம்  சரி!யார் இந்த மு அருணாசலம்? அறிஞர்களுக்கெல்லாம் அறிஞர் என்று எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? 

தினமணி நாளிதழில் மூன்றாண்டுகளுக்கு முன் வெளிவநத ஒரு கட்டுரையில் விரிவாக 

தமிழிசையில் ஆர்வம் கொண்டவர்கள் மற்றும்  ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்த நூலைப் பரிந்துரை செய்யுங்கள்! பயன்படுத்துவோருக்கு வாங்கிப் பரிசளியுங்கள்!

தமிழ்ப் பதிப்புலகின் ஆவணக் காப்பகமாக இயங்கிவரும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் இதுபோன்ற எத்தனை நூல்களை வாசகருக்கு மிக நெருக்கமாகக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது, எத்தனை அரிய நூல்கள் மறுபதிப்புக் காண உதவியிருக்கிறது என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *