செண்பக ஜெகதீசன்

நல்ல பாடங்கள்
நமக்குக் கிடைப்பது மோசமான
நேரங்களில்தான்..

அடிமேல் அடிபடும் தங்கம்தான்
ஆபரணமாகிறது
அழகாய்ப் பெண்ணுக்கு..

சிதைக்கும் சிற்றுளியால்தான்
உதிக்கிறது
உயர்ந்த சிற்பம்…!

எத்தனை அடிவாங்கினாலும்
ஏன் திருந்தவில்லை
மனிதன் மட்டும்…!

           
படத்துக்கு நன்றி

http://www.colourbox.com/image/a-hammer-and-a-pencil-laying-on-plywood-image-2871064

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பாடமாய்…

  1. கற்களிடமிருந்தும்….மரங்களிடமிருந்தும்…ஏன்…விலங்குகளிடமிருந்தும் கூட கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில்தான் இன்னமும் மனிதன் இருக்கின்றான்;
    உங்கள் கவிதை பல மனங்களின் ஒட்டு மொத்த ஆதங்கம்.

  2. கருத்துரைக்கு நன்றி முகில்…!

                    -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *