நன்றி
என்
புன்னகைக்காக காதலித்தேன்
என்றாய் முதலில் .
என்னிடத்தில் ……
பொன் நகை
இல்லை என்றதும் ….என்னை
கை விட்டாய் .
கேட்டேன் ……..
கஷ்டம் என்றால்
பொன் நகையை அடகு வைக்கலாம்
புன்னகையை வைக்கமுடியாது ….என்றாய் .
நன்றி…
உன்னை அடையாளம் காட்டியதற்கு .
நாளை ..
நகையும் தீர்ந்தால்
என்னையே
அடகு வைக்க
தயங்க மாட்டாய் என்பது
என்ன நிச்சயம் .
படத்துக்கு நன்றி
http://www.vectorjunky.com/praying-hands—realistic…/71175583.html
பொன் வண்டுகளாய்த் திரியும் சில பெண் வண்டுகளை நாம்தான் அடையாளம் கண்டு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். இது அனுபவ அறிவு அய்யா.