தாசரி
நாகை வை. ராமஸ்வாமி
‘ஹாய் ரியாஸ் ஹௌ ஆர் யூ? வாட்ஸ் குகிங்?’
‘ஹல்லோ சந்திரன் வாங்க குகிங் நதிங்?’
‘அட அந்த ரியல் குகிங் இல்லப்பா என்ன விசேஷம்னு கேட்டேன்?’
‘அது தெரியுமில்ல நானும் சும்மா தான் சொன்னேன் ஒண்ணும் விசேஷம் இல்ல. ஆமா இன்னிக்கு ஹாலிடே தானே ஜாலிடேயா கொண்டாடுவோமே?’
‘அந்த ஐடியாவோட தாம்ப்பா நான் வந்தேன் தனியா சமைச்சு சமைச்சு போரடிச்சு போச்சு வெளிலே சாப்பிடுவோமா?’
‘ஓ சாப்பிடலாமே ஒய் நாட் கால் தாமஸ் டூ?’
‘யா ஐ வாஸ் ஆல்ஸோ தின்கிங் அபவுட் ஹிம்’
‘ஓகே கால் ஹிம்’
‘ஹலோ தாமஸ் ரியாஸ் ஹியர்’
ஹை ப்ரதர் சர்ப்ரைசிங் அட் திஸ் அவர் ஆஃப் ஹாலிடே சொல்லுங்க’
‘ஒண்ணுமில்ல ப்ரதர் நானும் சந்திரனும் சந்திச்சோம். இன்னக்கு ஹாலிடேயை ஜாலிடேயாக்கலாமுன்னு யோசிச்சோம். என்ன ரெடியா? வீ வில் எஞ்சாய் டுடே நாளைக்கு கட் அடிப்போம். தென் சாடர்டே ரூ சன்டே. ரெஸ்ட் அண்ட் வாஷிங் எட்செட்ரா.’
‘யா லவ்லி ஐடியா. எங்க வரணும் எப்ப வரணும் டெல் மீ வில் பீ தேர் பிஃபோர் யூ’
இந்தியாவின் வெவ்வேறு மாநிலத்திலுள்ளவர்களானாலும் வேறு வேறு மதத்தவர்களானாலும் தாமஸ் சந்திரன் ரியாஸ் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். வெவ்வேறு கம்பெனிகளின் வேலை
நிமித்தம் மும்பையிலிருந்து ஒரே நாளில் ஒரே விமானத்தில் அமெரிக்காவின் ‘சான் ஃப்ரான்ஸில்கோ’ விமான தளத்தில் இறங்கிய பின் மிக நெருங்கிய நண்பர்கள்.
அமெரிக்காவில் ‘ஸான் ஹோஸே (ளுயn துழளந)’யில் வாசம். ஆறு மாதங்களே ஆனாலும் அடிக்கடி சந்திப்பு ஊர் சுற்றல் அரட்டை சாப்பாடு.
மாதச் சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் ஐந்து லட்சம். இந்த ஆரம்ப நிலை வேலையே இந்தியாவிலிருந்தால் ரூபாய் ஒன்றிலிருந்து ஒன்றரை லட்சம். அமெரிக்காவில் மேக்டோனால்ட் போன்ற இடங்களில் ஒரு கப் காபி 300 ரூபாய். அதுவே இந்தியாவில் ஒரு சாதாராண ஹோட்டலில் முப்பது.
அவர்கள் அப்பா காலத்தில் அமெரிக்காவில் காபி 150 ரூபாயும் இந்தியாவில் ஐந்தாகவும் இருந்தது. அதற்கேற்ற சம்பளம் விலைவாசி. எதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கும்.
ஒரு டாக்சி பிடித்து ஒரு இந்திய ஹோட்டலைக் கண்டுபிடித்து மூவருக்கும் பொதுவான வட இந்திய பஞ்சாபி வெஜ் ரோடி சாப்பாடு ஒரு பிடி பிடித்தார்கள்.
பிறகு அங்கிருந்து கோல்டன் கேட் ஃபிஷர்மேன் வார்ஃப் முதலிய இடங்களுக்குச் சென்றுவிட்டு அன்று இரவு எல்லோருமே சந்திரன் ரூமிற்குச் சென்றுவிட்டார்கள்.
எல்லோரும் டயர்டாக இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததால் தூக்கம் வரவில்லை.
‘என்ன தாமஸ் ஆறு மாதமாக பழகி வருகிறோம் இன்னும் நாம் ஒருவருக்கொருவர் முழுவதுமாக தெரிந்து கொள்ளவில்லையே?’ என்றான் ரியாஸ்.
ஒவ்வொருவராக அவர்களைப்பற்றி சொல்லவேண்டியது என்று தீர்மானித்தார்கள்.
‘முதலில் நீங்க சொல்லுங்க சந்திரன். வேர் ஆர் யூ ஃப்ரம்இ அபவுட் யுர் ஃபமிலி’
‘என்னத்த….சொல்ல?’
‘நிறைய தமிழ் படம் பார்ப்பீர்களா? என்னத்த கன்னயா மாதிரி இழுக்கிறீங்க?’
‘நாட் லைக் தட். எப்படி பிகின் பண்ணறது?…..ம்?.. ஓகே. ஐ வில் ஸ்டார்ட். ஐ வாஸ் பார்ன் ரூ ப்ராட் அப் இன் மும்பை. மை ஃபாதர் வாஸ் ஆல்சோ எ ஸாஃப்ட்வேர் எஞ்ஜினீர் ஆஃப் தோஸ் டேஸ் அண்ட் வீ ஆர் ஆல் மிடில் க்ளாஸ். ரென்டல் அகாமொடேஷன் தான் சொந்த வீடு கிடையாது.’ கொஞ்சம் அப்செட் ஆனான் சந்திரன்.
‘கமான் டியர். நன் ஆஃப் அஸ் ஆர் ஃப்ரம் ஹெவன். ப்ளீஸ் கன்டின்யூ.’ என்றார்கள் மற்ற இருவரும்.
‘எங்க கிராண்ட் டாட் தான் முதலில் மும்பை வந்தார் சம்வேர் இன் 1960. அவங்க அப்பா மை கிரேட் கிராண்ட் டாட் எல்லாம் மதுரை பக்கம் ஒரு கிராமம்.’
‘ஈஸ் இட்?’
‘யெஸ். மை கிராண்ட் டாட் லைஃப்ல ரொம்ப ஃபேமிலிக்காக சேக்ரிஃபைஸ் பண்ணி ஸஃபர் பண்ணியிருக்காங்கன்னு மை டாட் யூஸ்டு டெல்.’
‘ஒய்?’
‘அவங்க ஃபேமிலி ரொம்ப பெரிசு வித் லெஸ் இன்கம். அதனால தான் கிராண்ட் டேட் மும்பைக்கு வந்தாராம். அந்த காலத்து எஸ்.எஸ்.எல்.சி. மட்டும் 10 டைப்ரைட்டிங் ரூ ஷார்ட்ஹேண்ட்’
‘வாட் ஈஸ் திஸ் ஷார்ட்ஹேண்ட்?’
‘எ மெதேட் ஆஃப் ரைடிங் ஸ்போகன் வேர்ட்ஸ் இன் ஷார்ட் சைன் ஃபார்ம். அப்போ அவங்களுக்கு நல்ல டிமாண்ட்..’
‘ஓ நல்ல சேலரி கிடைத்திருக்கும்?’
‘யூ வில் நாட் பிலீவ். ஸ்டார்ட்டிங் சேலரி ஜஸ்ட் ருபீஸ் 150.’
‘வாட்? பெர் டே?’
‘நோ யார் மந்த்லி. அண்ட் அவங்க சிலவு போக மாதம் ரூபாய் ஐம்பது ஊருக்கு அனுப்பிடுவாங்களாம்.’
‘கிரேட். தென்?’
தென் ஹி காட் மேரீட் அண்ட் மை ஃபாதர் வாஸ் பார்ன். அவங்க எஞ்னீயிரிங் படித்து யுஎஸ்ல ஸேன்ஹோஸேயில் ஒன் அண்ட் ஹாஃப் யியர்ஸ் இருந்தாங்க. அப்பத்தான் அவங்க மேரேஜ் ஃபிக்ஸ் ஆச்சு. அதாவது இங்கே ட்வின் டவர்ஸ் தாக்கப்பட்டதே அப்போ.’
‘ஓ மை காட். வேர் வாஸ் ஹி அட் தட் டைம்.?
‘வெரி ஃபார். நோ ப்ராப்ளம். அதுக்கப்புறம் இந்தியாவுக்கு திரும்பிவிட்டார். அப்புறம் அவருக்கு கல்யாணம். பட் ஹீ குட் நாட் ரிடர்ன் டு யு எஸ்.’
‘தென் ஐ வாஸ் பார்ன் என்னை நல்லா படிக்க வச்சார். போஸ்ட் கிராஜுவேட் இன் கம்ப்யூட்டர் டெக்னாலஜி பிஸைட்ஸ் சம் அடிஷனல் க்வாலிபிகேஷன் இன் மேனேஜ்மெனட் அண்ட் ஹியர் ஐ ஆம் வித் யூ ஆல். மை அம்பிஷன் ஈஸ் டு மேக் மை பேரன்ட்ஸ் ஹேப்பி ஹெல்தி அண்ட் கம்ஃபர்டபிள். தட்ஸ் ஆல் அபவுட் மீ. நௌ ரியாஸ் யூ ஸ்டார்ட்.’
‘வொன்டர்ஃபுல் அண்ட் இன்டரஸ்டிங். தாமஸ் நீங்க சொல்லுங்க. தென் ஐ வில்.’
‘ஓகே.. கொஞ்சம் வாக் போய்விட்டு வரலாம். வெதர் நல்லா இருக்கே. தூக்கம் வரலே. நாளைக்கு எல்லோரும் ப்ரேக் அடிச்சிட்டு ரெஸ்ட் எடுப்போம்.’
‘தட்ஸ் நைஸ். இப்போ வாக் போய்க்கிட்டே பேசுவோமே. தாமஸ் சொல்லுங்க.’
‘யா நாங்க டெல்லியிலே இருக்கோம். எங்க மதர் கிரிஸ்டியன் பட் டாட் ஹிந்து ஃப்ரம் மும்பை. மை மாம் இன்ஸிஸ்டட் தட் மை டாட் ஆல்ஸோ ஷுட் பிகம் எ கிரிஸ்டியன் பிஃபோர் மேரேஜ்னு கண்டிஷன் போட்டாங்க. ஸோ ஹீ பிகேம் ஜார்ஜ் ஃப்ரம் ஜானகிராம்.’
‘அப்படியா?’
‘யா டெல்லி ஈஸ் லவ்லி நாட் லைக் தோஸ் டைம்ஸ். எல்லாம் இன்டர் நேஷனல் ஸ்டான்டர்டு. மை டாட் ஒரு ஸ்மால் பிசினஸ்மேன்.’
‘ஓ ஆண்டர்ப்ரனர்?’
‘யெஸ். அப்பர் மிடில் க்ளாஸ். நல்லா படிக்க வெச்சாங்க. எனக்குப் பிடித்த டெக்னாலஜி. வேலை கிடைச்சுது. வந்துட்டேன். அவ்ளோதான்.’
‘ஹேய் வாட் ஈஸ் திஸ்? ஸோ சிம்பிள். உங்களுக்கு எந்த ஊர்?’
‘ஓ மை டாட் டோல்டு மீ தட் ஹிஸ் டாட் வாஸ் ஃப்ரம் டமில்நாட்.’
‘விச் ப்ளேஸ் இன் டமில் நாட்?’
‘மதுரைன்னு தான் சொன்னாங்க.’
‘அட என்ன ஒற்றுமை? ரியாஸ் நீங்க கூட சொன்னீங்க இல்ல? ஒங்க கிராண்ட்ஃபாதர் வாஸ் ஃப்ரம் மதுரை?’
‘யெஸ். யூ நோ வீ ஆர் கன்வர்டட் முஸ்லிம்ஸ். எங்க மதர் ஹிந்து. பட் எங்க ஃபாதர் முஸ்லிம்.
‘அவங்களும் மும்பையிலிருந்துதான் வந்தாங்க. சண்டிகர்ல செட்டில் ஆகிட்டாங்க.’
‘ஃபாதர் என்ன செய்றாங்க?’
‘லாயர்.’
‘நிறைய நடந்துட்டோம். ரூமுக்குப் போவோமா? வீ வில் டேக் சம் ஸ்லீப். நாளைக்குத் தான் ப்ரேக் அடிக்கப் போறோமே. பாக்கி நாளைக்குப் பேசலாம்.’
‘தட்ஸ் பெட்டர். கொஞ்சம் டயர்டாகத்தான் இருக்கு.’
அடுத்த நாள் அவர்கள் எல்லோரும் சூரியனைப் பார்க்கும்பொழுது சூரியன் உச்சிக்கு வந்தாகிவிட்டது.
குளித்து காபி போட்டு குடித்துவிட்டு வெளியே சாப்பிடக் கிளம்பும் நேரம் சந்திரனுக்கு இந்தியாவிலிருந்து செல் ஃபோனில் அழைப்பு வந்தது.
‘ஹலோ சந்திராஇ கண்ணா எப்படிப்பா இருக்கே? நீ இல்லாம ரொம்ப லைஃப்லெஸ்ஸா இருக்குப்பா. நல்லா சாப்பிடுகிறாயா? உடம்பு நல்லா இருக்கா?’
‘அப்பா நீங்க எப்படி இருக்கீங்க? அம்மா எப்படி இருக்காங்க? ரெண்டு பேரும் ‘செக்கப்’ போனீங்களா?’
‘எக்சலன்ட். ஒன்லி திங் ஈஸ் வீ மிஸ் யூ டூ மச்.’
‘அப்பா ஒங்க ரெண்டு பேரையும் நான் த்ரீ மச் மிஸ் பண்றேன்.’
‘டேய் என்ன கடி ஜோக்கா? சரி ஃப்ரண்ட்ஸ் எல்லாம் பிடிச்சிட்டியா?’
‘யெஸ். அப்பா நானே சொல்லணும்னு இருந்தேன். எனக்கு பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் ரெண்டு. ப்யூட்டி ஈஸ் அவங்க ஒருத்தர் தமிழ் கிரிஸ்டியன் இன்னொருத்தர் தமிழ் முஸ்லிம் பட் அவங்க கிராண்ட் பேரண்ட்ஸ் எல்லாம் மதுரை தான்.’
‘அப்படியா? இன்டரஸ்டிங்.’
‘அப்புறம் ஒரிஜினலி அவங்க ஹிந்துக்கள்.’
‘ஈஸ் இட்?. ஓகே ஜாக்கிரதையா இருப்பா. அம்மா தூங்கியாச்சு’
‘ஓகே. அம்மாவை எழுப்ப வேண்டாம். என்னுடைய வந்தனம் சொல்லிட்டு கவலைப்படாமல் இருக்கச் சொல்லுங்க. டேக் கேர்.’
மற்ற இரு நண்பர்களும் அவர்கள் பெற்றோர்களுடன் பேசி நண்பர்கள் பற்றி சொன்னார்கள்.
எல்லோருடைய பெற்றோர்களுக்கும் நண்பர்களின் தாத்தா பாட்டி மதுரை என்று கேள்விப்பட்டதும் அவர்களைப் பற்றி விபரம் சேகரிக்கச் சொன்னார்கள்.
முதலில் ரியாஸ் அவன் அம்மாவிடம் பேசினான். ‘அமீ எப்படி இருக்கீங்க’
‘ரியாஸ் ரியாஸ்…’
‘அமீ ஏன் பேச மாட்டேங்கறீங்க? ரோத்தீ ஹை? (அழுகிறீர்களா?) நல்லா இருக்கீங்களா? வாப்பா எப்படி இருக்காங்க?’
‘நஹீ பேட்டா ஒன்ன நினைச்சு கண் கலங்கிட்டேன். இன் ஷா அல்லா நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்கே? சாப்பாடு கிடைக்குதா? வேலை பிடிச்சிருக்கா? நேத்து தானே பேசினே? உடம்பு சுகமில்லையா?’
‘நஹீ அமீ. ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும். இங்க எனக்கு பெஸ்ட் தோஸ்த் கிடைச்சிருக்காங்க. தமிழ்காரங்க அவங்க பேரண்ட்ஸ் கூட மும்பையிலிருந்தவங்க. ஆனால் அவங்க தாத்தா பாட்டி மதுரை பக்கம் ஏதோ குள்ளிப் பள்ளம்னு சொன்னாங்க. நம்ம தாத்தா ஊரும் மதுரை பக்கம்னு நீங்க சொல்லியிருக்கிங்களே?’
‘ஹாங் பேட்டா. அது குள்ளிப் பள்ளம் இல்ல முள்ளிப் பள்ளம். ஆமா. எதுக்கு இந்த கபர் (விஷயம்) எல்லாம் கேக்கிற? அதெல்லாம் வாணாம்ப்பா நானே மறந்துகிட்டிருக்கேன்.’
‘சும்மா சொல்லுங்க அமீ. எங்க தோஸ்த்துங்களுக்கு தெரிஞ்சிருக்கலாமில்ல?’
‘அவிங்களுக்கு எப்படிப்பா தெரியும்? தாத்தா பாட்டி இறந்து 35 40 வருஷம் ஆகிப்போச்சே?’
‘அவங்க அப்பா அம்மாவுக்குத் தெரிந்திருக்குமில்ல?’
‘டீக் ஹை டீக் ஹை. அவங்க பேர் சங்கரன் கௌரி.’
‘தேங்க் யூ அமீ. அப்புறம் எங்க மாமா பேரும் சொல்லுங்க.’
‘அதெல்லாம் வாணாம்ப்பா எங்க அண்ணன் ரெண்டு பேரும் என்னய மறந்துட்டாங்கப்பா’ என்ற போது அம்மாவின் துயரம் தெரிந்தது ரியாஸுக்கு.
‘நஹீ தோ சோட் தீஜியே அமீ (வேண்டாமென்றால் விட்டு விடுங்கள்). நீங்க வருத்தப் படாதீங்க.’
‘நஹீ பேட்டா பெரிய மாமா பேர் சுந்தரம் சிறியவர் ஜானகிராம்.’
‘பஹுத் அச்சா அமீ. இது போதும். நான் அப்புறம் பேசுகிறேன். வாப்பாகிட்ட சொல்லுங்க சப் டீக் சல்தா ஹை. குதா ஹாஃபிஸ்’
‘ஓகே பேட்டா நல்லா இரு ஜாக்கிரதையா இரு. குதா ஹாஃபிஸ்’
இந்த விபரங்களைக் கேட்ட தாமசுக்கு ஏதோ பொறி தட்டினாற் போல் இருந்தது. ஏனென்றால் அவன் அப்பா கிறிஸ்தவராக மாறுவதற்கு முன் அவர் பெயர் ஜானகிராம்.
உடனே அவன் அப்பாவுடன் தொடர்பு கொண்டு விபரங்களைச் சொன்னவுடன் அவருக்கு அதிர்ச்சியான மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அவரது தங்கை தான் ரியாஸின் அம்மா.
சந்திரனும் அவன் அம்மாவிடம் பேசியதில் அவன் அப்பாதான் ரியாஸின் பெரிய மாமா சுந்தரம் என்பதும் தெரிந்தது.
விபரங்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்து பெற்றோர்களிடம் தெரிவித்ததும் தான் ஆச்சரியம் காத்திருந்தது. ஒரே தாத்தா பாட்டியின் பேரர்கள் தான் நண்பர்கள் மூவரும் என்று தெரிந்ததும் வியப்பும் மகிழ்ச்சியும் பொங்கின.
சகோதர் இருவரும் சகோதரி ஒருவரும் திருமணத்திற்குப் பின் மதத்தால் வேறுபட்டதால் பேச்சு வார்த்தை அறுந்தது. உறவு முறிந்தது. இழந்த உறவு அவர்களின் குழந்தைகளால் ஒன்றாகியது.
அதைக் கொண்டாட மூவரின் பெற்றோர்களும் அமெரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டனர். எல்லோருக்கும் உலகம் மிகச் சிறியது அதில் வாழும் காலமோ கொஞ்சமே அதை ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது
இளமைப் பிராயத்தில் பிரிந்து சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின் முதுமையைத் தொடும் வயதில் சந்தித்த, அந்த ரத்த பாச பழுத்த இலைகள் (மலர்கள் என்று சொல்லலாம் என்றால் வயதானவர்களாயிற்றே) கண்கள் குளமாகி வார்த்தைகள் குளறி, நெஞ்சங்கள் விம்மின. பிரிந்தவர் கூடினால் பொங்கும் மகிழ்ச்சி வெள்ளம் அங்கும் பெருகியது.
50 ஆண்டுகளுக்கு முன் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெற்றோர்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஒப்புதலுடனும் ஒப்புதல் இல்லாமலும் காதல் கலப்புத் திருமணங்கள் நடக்கத்தொடங்கிய காலம்.
காலப்போக்கின் கட்டாயத்தினாலும் சமூக நிர்பந்த்தத்தினாலும் சினிமா தொலைக்காட்சி ஊடகங்களின் தாக்கத்தினாலும் இம்மாதிரி நிகழ்வுகளை பல பெற்றோர்கள் சங்கடத்துடனும் சிலர் சந்தோஷத்துடனும் ஏற்றுக்கொள்ளும் கட்டாய நிலை உருவாகிவிட்டது.
இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின் இந்நிலை இன்னும் மாறுதல் அடையக் கூடும். சாதி மத அடையாளம் காட்ட முடியாத அளவுக்கு கலப்புத் திருமணங்கள் பெருகிவிடுமாதலால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரே சாதி மத வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குள் (அப்படி எங்காவது இருந்தால்) திருமணங்கள் நடைபெற குறைந்த பக்ஷ வாய்ப்புக்கள் மட்டுமே இருக்கும்.
கலப்பு காதல் திருமணங்கள் ஏறத்தாழ ஒவ்வொரு குடும்பத்திலும் ஏன் சாதி சம்பிரதாயத்தில் ஊறி வெளியே வர இயலாத குடும்பங்களிலும் கூட சகஜமாகி விடும்.
ஆனால் இந்நிலை வருங்கால சந்ததியினரின் நன்மைக்கா இல்லையா என்பதை காலம் தான் சொல்லவேண்டும். மதச் சார்பில்லா மனிதத்தை நேசிப்பவர்கள் நன்மையே என்று தான் வாதாடுவார்கள்.
very good story emphasizing the fact that all religion are one.As a regular reader of vallamai,Iam happy and proud to see your story published and thanks for the vallamai team for publishing this wonderful story
ஓ! டாப் க்ளாஸ்! நாகை டு ஸானோஸே. ரொம்ப டச்சிங் ஸார்! ஆல் ஸெட் அண்ட் டன், வீ ஆர் ஆல் ஒன். ஆக்சுவலி, எல்லாரும் எங்க மருதைங்கறது குஷி,ஸார். குட் ஸ்டோரி, யார். பை! பை!
நன்றி திரு இன்னம்பூரான் அவர்களே. தவத்திரு வசிஷ்ட முனி, விசுவாமித்திர மஹா முனியை ‘ப்ரம்ஹ ரிஷி’ என்றது சாலப் பொருந்திய விஷயம். ஆனால் வசிஷ்ட முனி என்னைப் போன்ற ஒரு பாமரனை சாதாரணமாக மெச்சினாலே அவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சி அடைய முடியுமோ அதைப்போன்று ப்ல்லாயிரம் மடங்கு மகிழ்ச்சி எனக்கு. இந்த ஊக்கமும் ஆதரவும் எனக்கு ஆக்க பலத்தைக் கொடுப்பதாக உணர்கிறேன். மிக்க நன்றி ஐயா.
நன்றி வீ.ஆர். நாம எல்லாரும் ஒண்ணு தான்.