கையறு நிலையில்
சாந்தி மாரியப்பன்
“எப்போதான் கண் திறந்து
பார்க்கப்போறியோ?”
அங்கலாய்த்த பக்தனுக்குக்
கூரையைப்பிய்த்துக்கொண்டாவது
உதவிடும் துடிப்பில்
ஓடி வந்த கடவுள்
பேச்சற்று நின்றார்..
பிய்ப்பதற்குப்
பொத்தல் கூரைக்கும் வழியின்றி
வானமே கூரையாய்
உறங்கும்
நடைபாதை வாசியாய்க்கண்டு.
படத்திற்கு நன்றி:http://www.123rf.com/photo_10678670_kolkata-india–february-03-streets-of-kolkata-man-sleeping-on-the-streets-of-kolkata-india-on-februa.html
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்…அவன் கரண்ட் கட்டில் வெந்து வெந்து சாக வேண்டும்
ஓ. நோ ! யுத்த பேரிகையையும், மந்திரச்சொல்லையும் தந்த உங்களிடமிருந்து இப்படி ஒரு படைப்பை எதிபார்க்கவில்லை. ஏமாற்றி விட்டீர்கள் சாந்தி!
நாலே சொல்லில் நாட்டையே உலுக்கும் சொல்லாத்திரம். வாழ்த்துக்கள்.
@முகில் தினகரன்,
இளங்கோ,
இன்னம்பூரான் ஐயா,
வாசித்தமைக்கு மிக்க நன்றி.
கடவுளைப் பேச்சற்று நிற்கவைத்த
கவிதை,
தடையின்றிப் பேசவைக்குதே நம்மை..
நன்று…!
-செண்பக ஜெகதீசன்…
இயல்பானதொரு கவிதை! என்னுடைய வலைப்பூவிலும் இதுபோன்றதொரு படத்துடன் கவிதையை போட்டிருக்கிறேன்! வருகை தாருங்கள்!வலைப்பூ மாயவரத்தான் எம்ஜிஆர்