உன் அன்பை!
இன்னும் யோசித்து
செய்திருக்கலாமென
அங்கலாய்கிறார் அப்பா.
வந்து விடு
பேசி தீர்த்து திரும்பலாமென
புலம்புகிறாள் அம்மா.
எப்படி இப்படி
சகித்துக் கொள்கிறாய் என
சாடுகிறாள் சகோதரி.
இந்த கஷ்டம்
வேணுமா உனக்கு? என
வெடிக்கிறான் சகோதரன்.
கிளையின்
சேதத்தை பார்த்து
அக்கறை கொள்ளும்
இவர்களுக்கு
எப்படி புரியவைப்பேன்?
நசிந்து கிடந்தேனும்
வேராய் விரவி
என்னை நேராய்
பிடித்து வைத்திருக்கும்
உன் அன்பை!
படத்துக்கு நன்றி
http://www.zastavki.com/eng/Photoshop/wallpaper-17490-2.htm