சடசபை
தி.ந.இளங்கோவன்
விவாதிக்கப் படுகிறார்கள்.
கருத்துப் பரிமாறல்களுக்கும்
கருத்து மோதல்களுக்கும்
இடமில்லை இங்கே !
நாக்குக்கத்திகள் உரசும் ஓசைகள் !
கொட்டும் வார்த்தை உதிரத்தின் குரூரம் !
தோற்று அலறும் குரல்களின் வேதனை !
வெற்றுச் சவால்களின்,
ஆணவத்தின் எக்காள ஒலிகள் !
இங்கே இன்றைய காவுகள்,
நாளைய பட்டாக்கத்திகள் !
துதி பாடும் நாக்குகள்
நொடிப் பிறழ்வில்
கக்குமிங்கே தீக்கங்குகள் !
கருத்துக் குடமேந்தி வருவோரும்
கருத்துக்காய் குடமேந்தி வருவோரும்
பத்திரமாய் ஒதுங்கிச் செல்லுங்கள்,
கண், காது, வாய் பொத்தி
காந்திமகான் சொன்னது போல் !
இங்கே மனிதர்கள் மட்டுமே
விவாதிக்கப் படுகிறார்கள்.
கருத்துப் பரிமாறல்களுக்கும்
கருத்து மோதல்களுக்கும்
இடமில்லை இங்கே !
சித்திரத்துக்கு நன்றி: