சகலகலாவல்லியே…!
கவிநயா
சகலகலா வல்லியே — உனைப் பாட
தீந்தமிழ் வரும் துள்ளியே
(சகலகலா)
பண்ணிசை உனைப் பாட
எண்திசை உனை வாழ்த்த
கண்மிசை நீர் பெருக
என்திசை நீ பார்க்க
(சகலகலா)
ஒவ்வொரு கலையிலும் உள்ளொளிர்ந்திருப்பாய்
வேதத்தின் நாதமாய் நீ ஒலித்திருப்பாய்
நான்முகன் நாவினில் நீ குடியிருப்பாய்
நற்றமிழ் நான்பாட அகம்மகிழ்ந்திருப்பாய்
(சகலகலா)
சுப்புத்தாத்தாவின் சகலகலாவல்லி