செண்பக ஜெகதீசன்
குறையிலாக் கல்விக் குருகுலமே
குமர குருபரர் கலாவல்லியே,
உறைவது வெள்ளைத் தாமரையிலே
உரைத்திடும் பாவலர் நாவினிலே,
நிறைவுடன் புகழது தருபவளே
நினைத்ததும் அருள்தர வருபவளே,
மறைகளில் நிறைந்திடும் தலைமகளே
மனதுடன் பணிந்தோம் கலைமகளே…!
http://srilalithatripurasundari.wordpress.com/lalita-sahasranama/impact-of-chanting-lalitha-sahasranama/sri-lalitha-tripura-sundari-an-overview/meanings-of-lalitha-sahasranamam/nitya-buddha/
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…