பணத்துக்கு என்ன செய்வது “

0

செழியன்
 

உழைக்க  மனமுண்டு .

உடைக்க மரமுண்டு.
அவனுக்கு கூலி ..ஐம்பது  ரூபா  நோட்டு  இரண்டு .
அவன் வாழ்வது ……
ஐந்து  ஜீவன்களோடு .
கட்டிலில்  மூன்று
தொட்டிலில்  ஒன்று .
எட்டிபார்க்கிறது .
 

 

கட்டியவள்…தங்க ..                                       
கட்டி’ யவள் .அவனுக்கு .
கஞ்சி குடித்தபின்
எஞ்சி  இருப்பது
நெஞ்சு விடும்
நிறைவான மூச்சே !
நிறைவான  உணவு
அவன் வாழ்வில்
வளையாத  கேள்விக்குறி  ஒன்று
வந்தாலே  உண்டு .
அவன்  பல்லவியோ……
பணத்திற்கு   என்ன செய்வது…
அவன் ..
வெட்டிய   மரம்   பல.

வெட்டா  மரமும்  உள
வறுமை  எனும்  மரத்தை
வாழ்வெனும்  கோடாலியால்
தினமும் வெட்டுகிறான்
தின கூலி  பேசி .
வயது  ஏறுகிறது ..
வாங்குபவன்  கூலி  ஏறவில்லை
வெட்டிய பின் மரம் தளைகிறது
வெட்டியவன்  வாழ்வு  தளையவில்லை
தட்டி கேட் க
இவனால்  முடியவில்லை .
எட்டியே  நிற்கிறான் .
கட்டி கொள்ள என்று
உடுப்பு  என்று  ஒன்று  இவன்
இடுப்பிற்கு  உண்டு .
அதுவும் கிழிந்தால் ….
அதையும்  கோவணமாக்குகிறான்..
அவன் பெற்ற
அருஞ் செல்வங்களுக்கு ..
அவன் பல்லவியோ ….
பணத்துக்கு  என்ன  செய்வது?

அவன் ….
இரவிற்கு  குடிசை  உண்டு
குடிசைக்கு  கூரைஉண்டு
கூரையில்  பலகணிகள்  பலவுண்டு
அவைகளில்  சந்திரனின்  ஒளியுண்டு
நாட்டிலே …பவர்  கட்   உண்டு .
இதனால்
பலருக்கு  சங்கட முண்டு
இவனுக்கு ஏது…அந்த சங்கடம் .
சிரிக்க மனமுண்டு ..
சேமிக்க  வறுமை உண்டு
செலவுக்கு  உடல் உண்டு
வரவுக்கு குழந்தை  உண்டு
வந்ததற்கு  நோயுண்டு
நோய்க்கு மருந்து  உண்டு .
மருந்துக்கு  பணமுண்டோ ?
பல்லவிதானே உண்டு.
அவன் பல்லவி ….
பணத்துக்கு என்ன செய்வது ?
 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *