செழியன்

 

அவருக்கு பணமுண்டு .
அதற்கோர்  பெட்டகமுண்டு .
அந்த பணம் ….
வந்ததற்கும்  கணக்கில்லை .
வருவதற்கும்  கணக்கில்லை .
வேலைக்கோர்  உணவுண்டு .
விருந்திற்கோர்  ஆளுண்டு .
அருந்தத்தான் தடை  அவருக்கு.
ஆம்!…
அவர் உதிரத்தில்
மிகையாம்  கொழுப்பு சத்து …..அது
பகையாம்  அவர் உயிருக்கு .
மருத்துவர் தடை  இது .
மறுக்கமுடியவில்லை ,,….அவரால் .
மனம்  வெதும்புகிறார் .
இவர் பல்லவி ….
பணத்தை  என்ன செய்வது .
அவருக்கோ …
அடுக்கு மாடியுண்டு .
அதிலே .அடுக்கிய
நோட்டு கத்தையுண்டு .
அதை  எண்ணி  பார்க்க நேரமில்லை .
கத்தை வந்த
வித்தையை  எண்ணவும் மனமில்லை .
கலருக்கொரு  காருண்டு .
காருக்கொரு  ஓட்டிண்டு.
இருந்தென்ன ……
காலார நடக்க வேண்டுகிறார்  மருத்துவர்.
கொழுத்த உடம்பை
குறைப்பதற்கு .
இவர்  பல்லவி ….
பணத்தை  என்ன பண்ணுவது .
அவருக்கோ
ஆலைகள்  பலவுண்டு .
அதிலே வேலைக்களுமுண்டு பலருக்கு .
ஆலையில்   வந்ததை
சாலையில்  போவோருக்கும்
சார்பு அற்றவருக்கும்
ஆதரவாய்  அளித்தார் .
அவர் ஆனந்தம்  கண்டு
இவர் மகிழ்ந்தார் .
ஆனால் …
அள்ளி  அணைத்து..
கொஞ்சி மகிழ
அன்பு மனைவிக்கு
கொடுக்க முடியவில்லை
குழந்தை  செல்வத்தை .
கோடி கோடியாய்…
பணமிருந்தென்ன…..
கொஞ்சு மொழி  கேட்க
குழந்தை  இல்லையே .
இவர் பல்லவி
பணத்தை  என்ன   செய்வது ?


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *