வெ.மீரா ஜனனி

இரவு இருட்டில் வானத்தின் கருமையில்
சிரிக்கும் சப்தத்தைக் கேட்டேன்,
மேலே நட்சத்திரத்துடன் மின்னும்
நிலவு தான் சிரிக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்,
“ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டதற்கு
நான் தேய்ந்து மறைவேன் என்று உணராமல்
என்னை ரசிப்பதைப் பார்த்து என்றது.
அப்பொழுது நிலா நிலா ஓடி வா என்று ஒரு சிறுமி பாட
அது மேலும் சிரித்து மகிழ்ச்சியானது.
நான் ஓடி வந்து விட்டால் இரவில் வெளிச்சம் ஏது?  என்று வியப்பாய்க் கூறியது.
மகிழ்ச்சியினால் அது இன்னும் அழகாய் ஜொலிக்க
அந்த சிறுமி நிலா என்னை நோக்கி வருகிறது என்று ஆனந்தக் கூத்தாடினாள்.
மற்றவர்களை மகிழ்விப்பதே வாழ்க்கை என்று உணர்த்தும் அழகு நிலா
வானிலும் என் பார்வையிலும் மேலும் உயர்ந்தது.

படத்துக்கு நன்றி

http://www.all4myspace.com/layouts-2.0/moon-myspace-layouts-2.0/0

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.