முகில் தினகரன்
 

‘ஏங்க…ஒரு நிமிஷம் இருங்க…உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”

குனிந்து காலில் ஷூவை மாட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் திவாகரன் தலையைத் தூக்கி ‘சாவித்திரி….நான் ரொம்ப அவசரமாக் கிளம்பிட்டிருக்கேன்…சாயந்திரம் சொல்லக் கூடாதா உன்னோட அந்த முக்கியமான விஷயத்தை…?”

‘ப்ச்…இது நம்ம பொண்ணு கலைவாணி சம்மந்தப்பட்ட விஷயம்ங்க” என்று அவள் சொன்னதும் பரபரப்பானார் அவர்..

‘என்னது…கலைவாணி சம்மந்தப்பட்ட விஷயமா?…என்ன சொல்லு…சொல்லு”

‘நம்ம பொண்ணு மொட்டை மாடில உட்கார்ந்து படிச்சிட்டிருக்கும் போது….எதிர்த்த வீட்டுப் பையன்….”

இன்ஸ்பெக்டர் நெற்றியைச் சுருக்க,

‘அதாங்க..எப்பப் பாரு மோட்டார; பைக்குல ‘டர்;..டர்;”ன்னு போயிட்டு வந்திட்டிருப்பானே?….அவன்தான்… அவங்க வீட்டு மாடில நின்னுட்டு இவளையே நோட்டம் விட்டுக்கிட்டு….அப்பப்ப கை காட்டிட்டு…சேட்டை பண்ணிட்டே இருக்கானாம்…நேத்திக்கு…. நேத்திக்கு….” அவள் தயங்க,

‘என்ன நேத்திக்கு?” கத்தலாய்க் கேட்டார் இன்ஸ்பெக்டர்;.

‘ஃப்ளையிங் கிஸ் குடுக்கறானாம்…பாவம் இவ…இப்ப மொட்டை மாடிக்குப் போகவே பயப்படறா..”

ரத்தம் கொதித்தது இன்ஸ்பெக்டருக்கு ‘ராஸ்கல்…என்ன தைரியமிருந்தா ஒரு இன்ஸ்பெக்டரோட மகள்கிட்டேயே உன் வேலையைக் காட்டுவே?” ஆவேசமாய் எழுந்து தெருவில் இறங்கி எதிர் வீட்டை நோக்கி நடந்த கணவனை ஓடி வந்து தடுத்தாள் சாவித்திரி.

‘எங்க போறீங்க,…கொஞ்சம் பொறுமையா இருங்க…இது நம்ம பொண்ணு சம்மந்தப்பட்ட விஷயம் கொஞ்சம் நிதானமாத்தான் கையாளணும்”

அவள் பேச்சை சிறிதும் சட்டை செய்யாமல் எதிர்; வீட்டு கேட்டிலிருந்த காலிங் பெல்லை தன் கோபத்திற்கு வடிகாலாக்கி அழுத்தினார்.

கர்ண கடூரமாய் அலறிய அந்த காலிங் பெல்லின் ஒலி எதிர் வீட்டு இளைஞனின் தந்தையை உடனே வாசலுக்குக் கொண்டு வந்தது.

வந்தவரிடம் அவரது அருமைப் புத்திரனின்  சேட்டைகளைச் சொல்லி ‘பார்த்து அடக்கி வைங்க…இல்லைன்னா நான் என் போலீஸ் வேலையைக் காட்ட வேண்டி வந்துடும்…” எச்சரித்தார் இன்ஸ்பெக்டர்..

அந்த நபரோ இன்ஸ்பெக்டரின் அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் சிறிதும் அஞ்சாதவராய் ‘ஹல்லோ…மிஸ்டர் இன்ஸ்பெக்டர்… இது ரெண்டு பேர் சம்மந்தப்பட்ட விஷயம்…. அப்படியிருக்க என் பையனை மட்டும் எப்படித் தப்பு சொல்ல முடியும்?….உங்க பொண்ணை விசாரிச்சீங்களா?…விசாரிங.க..அதுகிட்டேயும் ஏதாவது தப்பிருக்கும்…ஏன்னா பொண்ணுக சைடுல இருந்து வரவேற்பு இல்லாம பசங்க எதுவும் செய்ய மாட்டாங்க”

சற்றும் தயக்கமின்றி அவர் தன் மகளின் மேல் அபாண்டத்தை வீச ஆக்ரோஷமானார் இன்ஸ்பெக்டர் திவாகரன்.

‘யோவ்..ஏதோ வயசுல பெரியவரா இருக்கியேன்னு மரியாதை குடுத்துப் பேசினா ரொம்ப ராங்கா பேசறியே… உன்னையும்…உன் பையனையும் ஏதாவதொரு கேஸ்ல புக் பண்ணி… ஸ்டெஷனுக்குக் கொண்டு போய் லாடம் கட்டினாத்தான் திருந்துவீங்க போலிருக்கு”

‘அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாருங்க இன்ஸ்பெக்டர்.….உன்னைய விடப் பெரிய ஆளுங்கெல்லாம் என் கைக்குள்ளார இருக்காங்க….நான் நெனைச்சா..உன்னையே தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திடுவேன் தெரியுமா?”

மீசை துடித்தது இன்ஸ்பெக்டருக்கு.  ‘ராஸ்கல்…என்னவொரு தெனாவெட்டு”

‘த பாருய்யா…கடைசியாக் கேட்கறேன்….உன் பையனை நீ கண்டிச்சு வைக்கறியா?..இல்லை நானே கண்டிக்கட்டுமா?”

‘வேண்டாம் இன்ஸ்பெக்டா;…அவன் என்னைய மாதிரி சாது இல்லை…இன்ஸ்பெக்டர்ன்னு கூடப் பார்க்காம எடுத்த எடுப்புல வீசிடுவான்”

‘நாயே…உன்னைய….” பற்களைக் கடித்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் அந்த நபரை நோக்கிப் பாய ஓடி வந்து தடுத்தாள் சாவித்திரி.

‘விட மாட்டேண்டி இவனுகளை… பார்த்துடறேன் ஒரு கை…” திமிறியவருடன் மல்லுக் கட்டினாள்.

சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு கணவனை அங்கிருந்து நகர்த்தி வீட்டிற்குள் கொண்டு வந்தாள்.

அடுத்த வாரத்தில் ஒரு நாள்,

புறநகர்ப் பகுதியிலிருந்த அந்த லாட்ஜில் திடுமெனப் புகுந்த காவல் துறை ஒவ்வொரு அறையாய் அலசியது.

கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட அழகிகளும்…பணக்கார வீட்டு இளைஞர்களும் அரைகுறை ஆடையுடன் சிக்க எல்லோரையும் வரிசையாய் ஜீப்பில் ஏற்றினார் இன்ஸ்பெக்டர் திவாகரன்.

கடைசியாய் ஏறிய இளைஞனைக் கூர்ந்து பார்த்த இன்ஸ்பெக்டர் ‘தம்பீ….நீ? ”

‘யெஸ்… உங்க எதிர்; வீட்ல குடியிருக்கற பையன்தான்” என்றான் வெகு அலட்சியமாய்

‘ஆஹா…கெடைச்சுதுடா சான்ஸ்…இது போதும் இவனையும் இவன் அப்பனையும் மானம் கெட வைக்க” மனம் குதூகலித்தது இன்ஸ்பெக்டர் திவாகரனுக்கு.

அதே நேரம் மனதின் இன்னொரு மூலையிலிருந்து இன்னொரு குரல் எழும்பியது ‘பழி வாங்கும் குணம் என்பது ஒரு அநாகரீகமான குணம்…அது உனக்கு இருக்கலாமா?…இவனைப் பெத்தவன்தான் ஒரு மூடன்…முட்டாள்…மகனை வளர்க்கத் தெரியாமல் வளர்த்து அவனுடைய எதிர்காலத்தையே பாழாக்கிக் கொண்டிருக்கற ஒரு பைத்தியக்காரன்… அவனைப் பழி வாங்குவதாய் நினைத்து ஒரு இளைஞனின் எதிர்காலச் சூன்யத்திற்கு நீயும் காரணமாகலாமா?…யோசி திவாகர்…எதையும் மாத்தி யோசி..மாத்தி யோசி”

சில விநாடிகள் குழப்பத்தில் உழன்றவர்; சட்டென்று தெளிந்து ‘தம்பி…நீ வண்டில ஏற வேண்டாம்…என் கூட வா”

‘ஏன் இன்ஸ்பெக்டர்?…எதுக்கு என்னையத் தனியா கூப்படறீங்க?”

அவன் அப்படிக் கேட்டது பக்கத்தில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிளுக்கு எரிச்சலை உண்டு பண்ணி விட ‘டேய்…அய்யா கூப்பிட்டா போகாம…கேள்வியா கேட்கறே?” லத்தியால் அவனை விளாசினார;.

அடுத்த நிமிடமே இன்ஸ்பெக்டரைப் பின் தொடர்ந்தான்.

லாட்ஜின் ரிசப்ஷன் ஷோபாவில் அவனை அமர வைத்து ‘கூப்படு தம்பி உங்கப்பாவை…கூப்பிட்டு உடனே இங்க வரச் சொல்லு”

தயங்கியபடியே கூப்பிட்டவன் தலை குனிந்து அமர;ந்தான். உள்ளுக்குள் தாறுமாறான எண்ணங்கள் தறிகெட்டு ஓடின. ‘என்ன பண்ணப் போறான் இந்த ஆளு?… நான் இவன் பொண்ணைப் பார்த்து செஞ்ச சேட்டைக்கெல்லாம் பழி வாங்கும் விதமா என்னையும் எங்கப்பாவையும் போட்டோ எடுத்து நாளைக்கு எல்லாப் பத்திரிக்கையிலும் போட்டு…மானத்தை வாங்கப் போறான் போலிருக்கு”

இருபதே நிமிடத்தில் அலறியடித்துக் கொண்டு வந்த அவன் தகப்பனிடம் கான்ஸ்டபிள் விபரத்தைக் கூறி இன்ஸ்பெக்டரிடம் அழைத்து வர,

திவாகரனைக் கண்டதும முகம் மாறினார் அவர் ‘அய்யய்யோ…இவனா?”

ஆனால் இன்ஸ்பெக்டர் திவாகரனோ ஒரு சிறிய புன்னகையுடன் அவரை நெருங்கி அவர்; தோளில் கையைப் போட்டு ‘பயப்படாதீங்க மிஸ்டர்…பயப்படாதீங்க…. நான் உங்களை மாதிரியில்லை…காக்கி உடுப்பையும்…சல்யூட்டையும் மட்டும்தான் விறைப்பாய் வைத்திருப்பேன்…மனசை அல்ல”

அந்த நபர் குழப்பமாய் இன்ஸ்பெக்டரையே பார்க்க,

‘சார;…இந்தக் காலம் நம்ம காலம் மாதிரியில்லை…இளவயசுப் பசங்க கெட்டுப் போறதுக்கான சாத்தியக் கூறுகள் இப்ப ஏராளம்…நாம்தான் அவர்களை அப்படியெல்லாம் கெட்டுப் போகாத மாதிரி வழி நடத்திக் கூட்டிட்டுப் போகணும்…நாம அதைச் செய்யாம பசங்களுக்கு சுதந்திரம் குடுக்கறதா நெனைச்சுக்கிட்டு அவங்க எதிர;காலத்தைக் கோணலாக்கிட்டிருக்கோம்…அன்னிக்கு கொஞ்சமும் யோசிக்காம என் பொண்ணு மேல எப்பேர்ப்பட்ட ஒரு அபாண்டத்தை வீசினீங்க?…அதை நான் மனசுல வெச்சுக்கிட்டு எனக்குக் கெடைச்ச இந்த சான்ஸை வேற மாதிரி உபயோகிச்சா உங்க மகனோட எதிர்காலம் என்னவாகும்னு யோசிச்சுப் பாருங்க…”

‘சார்…அது…வந்து…அன்னிக்கு….”

‘த பாருங்க…பழி வாங்க கெடைச்ச சந்தர்ப்பத்தை ஏன் அவங்களைத் திருத்தறதுக்கு கெடைச்ச சந்தர்ப்பமா ஆக்கினா என்னன்னு மாத்தி யோசிச்சேன்…அதனாலதான்… மத்தவங்களையெல்லாம் ஸ்டேஷனுக்கு அனுப்பிட்டு உங்க பையனை மடடும் தனியா வெய்ட் பண்ண வெச்சேன்!”

பேசிக் கொண்டிருக்கும் போதே ‘தடால் ” என தன் காலில் விழுந்த தந்தையையும் மகனையும் தொட்டுத் தூக்கிய இன்ஸ்பெக்டர் ‘பரவாயில்லை…என் எண்ணம் ஜெயிச்சிடுச்சு…நீங்க உணர்ந்துட்டீங்க…இது போதும் எனக்கு” என்று சொல்லிவிட்டு  வேக வேகமாய் நடந்து ஜீப்பில் ஏறினார்..

(முற்றும்)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *