விசாகை மனோகரன்
 

வாழ்க்கை ஓடத்தின் ஓட்டத்தில்

வாழ்ந்து கொண்டிருக்கும் வேடத்தில்

நிரந்தரம் என்பது ஏதடா?

அதை நினைத்து மாய்வது ஏனடா?

 

ஆட்டத்தின் நாயகன் அவன்

ஆட்டுவிப்பனும் அவன்

ஆடாது நிற்க முயன்றால்

ஆட்டாது விடுவானோ அவன்

 

ஆட்டுவதும் அவனே

அரவணைப்பதும் அவனே

அவன் ஆடாத ஆட்டமா?

அவன் இல்லாமல் நாமா?

 எல்லாம் அவனே!!!!!!!!

 

 படத்துக்கு நன்றி

http://www.puppetryindia.org/page1/page7/page7.html

 

பதிவாசிரியரைப் பற்றி

13 thoughts on “அவன்

  1. மனோகரன் அவர்களின் கவிதை, எளிமையும் வரிகளில் வலிமையும் கொண்டு நம் ஆட்டத்தையும் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

  2. First shot,

    A very good start

    My best wishes for better ones

    There seems to be no link of  2nd & 3rd Paragraphs with the first paragraph

  3. ஆட்டுவித்தவன் ,அவன் இருக்க ,’ஆடாதவன் ,யார் உள்ளார்,?ஏற்றிவித்தவன்,அவனே இறக்கி விடுவதும்
    அவனே ,உங்களுக்கு கவிதை எழுது என்று தூண் டுவது அவன் என்றல் ,,..அதைஎங்களை படிக்க வைத்து
    சோதிப்பதும் அவன் எழுதிய எங்கள் தலை எழுதள்ளவோ ,….!!!!!

    ”””யார் …அங்கே !!அரசே என்ன வேண்டும் ,…””‘. இதோ நிற்கிறாரே மனோகரா புலவர் அவர் எழுதிவந்த கவிதை
    எங்களை ஆனந்தப்படுத்தியது,,,, இவருக்கு ஆயிரம் பொற்காசுகளை ,,…தாருங்கள் ,….
    ஆகட்டும் மன்னா.,””என்ன மன்னா ,….ஆயிரம் பொற்காசு பரிசு என்று ஒரு பொற்காசை தருகிறீர்கள் ,..
    ஹி,….ஹி ….என்ன புலவரே ,…நீங்கள் ,..இன்னும் எந்த ஆண்டில் இருக்கீறீர்கள் ,…எல்லாம் வரி போக மீதம் தான் அது ,….,.புலவரே ,இந்த நாட்டை மறக்க வேண்டாம் ,..நீங்கள் எப்போது வந்தாலும் ,,என்னை பாடி பரிசு வெல்லலாம் ,,ஆனந்தமாக செல்லுங்கள்,,,..உங்கள் நாட்டு புலவர் பலருக்கும் சொலுங்கள் ,…

  4. “வாழ்க்கை ஓடத்தின் ஓட்டத்தில்
    வாழ்ந்து கொண்டிருக்கும் வேடத்தில்
    நிரந்தரம் என்பது ஏதடா?
    அதை நினைத்து மாய்வது ஏனடா?”

    என்ன அருமையான வரிகள். தினசரி அவசர வாழ்க்கை ஓட்டத்தில் இருப்பவர்களை நிதானித்து சிந்திக்க வைக்கும் வரிகள். நன்றி மனோகரன். தத்துவங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    (தேவாவின் கருத்தைப் படித்து இன்னமும் சிரித்து முடியவில்லை:))

  5. நன்றி தேவா. என்னை எழுதத் தூண்டுவது அவன் தான். ஆனால் அதை ஊக்குவிப்பது நண்பன் திவாகரும் நீயும் தானே!!!!!

  6. நன்றி தேமொழி (என்ன ஆழகான பெயர்) தேவா எனது நல்ல நண்பன். நான் எழுதியிருக்கும் 4 சிறுகதைக்கும், ஒரு கவிதைக்கும் அவனும் திவாகரும் தானே ஊக்குவிப்பு.

  7. சம்பத் ஸார், உங்கள் ஆசீர்வாதமே பெரிய விமர்சனம். எனக்கு அது போதும்.

  8. romba romba nalla iruku sir! innum innum ungalterndhu edhir paarkirom…..aadaadu nirka muyandral aattaadu vittu viduvaano avan…..arumai

Leave a Reply to மனோகரன்

Your email address will not be published. Required fields are marked *