தீக்கொழுந்தில் ஒரு பனித்துளி (19)
முகில் தினகரன்
அத்தியாயம் – 19
மதியம் மூன்று மணியிருக்கும்,
மாலையில் மகன் வந்ததும் அவனிடம் எப்படிப் பேசுவது….எதைச் சொல்லி அவனைச் சரிக்கட்டி, தேவியின் கணவனுக்கு கிட்னி தானம் செய்யச் சொல்வது, என்று தனக்குள் ஒத்திகை பார்த்தபடி அமர;ந்திருந்தாள் லட்சுமி.
அப்போது கதவு ‘பட..பட”வெனத் தட்டப்பட,
ஓடிப் போய்த் திறந்தாள்.
சுந்தர் பணி புரியும் தறிக் கூடத்து சிப்பந்தியொருவன் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் கலவரம். எதையோ சொல்ல துடிக்கும் உதடுகள். கண்களில் பீதியின் வெளிப்பாடு.
‘என்னப்பா…இந்த நேரத்துல?”
‘அ…ம்…..மா…! வந்து…வந்து…தறிக் கூடத்துல தீப்பிடிச்சிடுச்சம்மா!”
‘அய்யய்யோ….என்னாச்சு…என் பையனுக்கு என்னாச்சு?” பதறினாள் லட்சுமி.
‘ஆளுங்களுக்கெல்லாம் ஒண்ணுமில்லை….ரெண்டு மூணு பேருக்குத்தான்…கொஞ்சம் தீக்காயம்!” அவன் எதையோ மறைக்கிறான் என்பதை அவன் தயக்கத்திலிருந்தே புரிந்து கொண்ட லட்சுமி,
‘தம்பி…சாமி சத்தியமா உண்மையச் சொல்லுப்பா..என் மகன் எப்படியிருக்கான்?’ லட்சுமி அவனை நெருங்கி வந்து அவன் தாடையைத் தொட்டுத் திருப்பிக் கேட்டாள்.
‘ஆமாம்மா…சுந்தருக்கு கொஞ்சம் அதிகப்படியாவே தீக்காயம் ஏற்பட்டிடுச்சும்மா!…ஈரோடு ஜி.ஹெச்.சுக்குத்தான் கொண்டு போயிருக்காங்க!”
‘அய்யோ…சுந்தர்;!” அலறியபடியே அவள் சாய,
வந்தவன் செய்வதறியாது திகைத்து நின்று, பிறகு சட்டென்று சுதாரித்துக் கொண்டு, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தான்.
—–
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி.
உடல் முழுதும் தீக்காயங்கள் வாங்கி, தலை முடிகள் முற்றிலுமாய் கருகி, முகம் கோரமாகி, குற்றுயிரும் குலையுயிருமாய் அவசர சிகிச்சைப் பிரிவில் கிடந்தான் சுந்தர்.
முதல் கட்ட சிகிச்சையை முடித்து விட்டு, அடுத்த கட்ட சிகிச்சைக்குப் போகும் முன், அவன் மயக்கம் தெளியக் காத்திருந்தார; டாக்டா;.
‘எக்ஸ்க்யு+ஸ் மீ டாக்டர;!” என்றபடி உள்ளே நுழைந்த ஒரு இளம் டாக்டர;, ‘டாக்டர;…இவரோட வந்தவங்க…வெளிய நின்னுட்டு கேள்வி மேல கேள்வி கேட்டுத் துளைச்செடுக்கறாங்க டாக்டர்;…பேஸண்டடோட கண்டிஷன் என்னன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா அதை அவங்களுக்கு கன்வே பண்ணி லேசா அவங்களை ஆஃப் பண்ணிடுவேன்!”
‘ம்ஹூம்….பேஸண்ட் இன்னும் சுயநினைவுக்கு வரலை…வந்தாத்தான் எதுவும் சொல்ல முடியும்!…ஓ.கே!…’இன்னும் அபாய கட்டத்துலதான் இருக்கார்;”ன்னு சொல்லி வைங்க!” என்றார; சீப் டாக்டர்.
‘டாக்டர்…இப்ப நான் தெரிஞ்சுக்க கேட்கறேன்…சொல்லுங்க…பேஸண்டோட உண்மையான நிலமை என்ன?” அந்த இளம் டாக்டர; சற்று தாழ்வான குரலில் கேட்க,
‘ப்ச்!..”என்றவாறு உதட்டைப் பிதுக்கிய சீப் டாக்டர்;, ‘ம்ஹூம்…தேறாது!” எனறார்…ஒரே வார்த்தையில்.
‘மை காட்!” என்றபடி அந்த இளம் டாக்டர் வெளியேறினார்.
அவர் வெளியேறிய சில நிமிடங்களில் அந்த அறைக்குள் முனகல் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தார; சீப் டாக்டர்.
சுந்தர்தான்.
கண்களைத் திறந்து விழிகளை மட்டும் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் நகர்த்தி எதையோ பார;வையால் தேடிக் கொண்டிருந்தான்.
அவனை நெருங்கி நின்று கூர்ந்து கவனித்தார; டாக்டர்;.
ரணங்களின் வேதனை அவன் கண்களில் அப்பட்டமாய்த் தெரிந்தது.
அவன் எதையோ சொல்லத் தவிப்பது உதடுகளின் துடிப்பில் தெரிய,
டாக்டர; குனிந்து அவன் காதருகில் சென்று, ‘மிஸ்டர், சுந்தர்;….பயப்படாதீங்க!…உங்களுக்கு பெரிசா ஒண்ணுமில்லை…ஒன்றிரண்டு சிறிய தீக்காயங்கள்தான்!”
‘டா…க்…ட…ர்!…. டா…க்…ட…ர்;!” மூச்சு விடவே சிரமப்பட்டான்.
‘ம்..சொல்லுங்க…”
‘டா…க்…ட…ர்!…நான் பொழைக்க….மாட்டேன்!….எ…ன…க்…கு…த் தெரியும்!…’மிகவும் கஷ்டப்பட்டுப் பேசினான்.
‘யார; சொன்னது?…நிச்சயம் நீங்க பொழைச்சுக்குவீங்க!”
‘இல்ல….டாக்டா;….நீ…நீங்க….அந்த…டாக்டர்கிட்ட…பேசிட்டிருந்ததை…நான் கேட்டேன்!”
திணறிப் போன டாக்டர்;, ‘அது…அது வந்து…சும்மா…” சமாளிக்கப் பார;த்தார்.
‘இ…ல்….ல டா…க்…ட…ர்! எப்படியும்…நான்…சாகத்தான்…போறன்!… அதுக்கு முன்னாடி…. என்னோட… என்னோட கிட்னிய…எடுத்து…சிவா மருத்துவமனைல…இருக்கற…ரத்ன…வேலுவுக்கு…குடுத்திடுங்க!’ சொல்லிட்டு டாக்டரையே ஊடுருவிப் பார;த்தான். அந்தப் பார்வையில் ஒரு கெஞ்சல் தெரிந்தது. வாழ்க்கையின் விளிம்பில்…மரணத்தில் வாசலில் இருந்து கொண்டு கெஞ்சும் அந்த ஜீவனின் இறுதி ஆசை டாக்டரை நெகிழச் செய்தது.
‘இப்படியும் ஒரு மனுசனா?…தான் சாகப் போறோம்னு தெரிஞ்சதும்…’எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க டாக்டர்” ன்னு கேட்காம எங்கியோ..ஏதோ ஒரு ஆஸ்பத்திரில இருக்கற யாரோ ஒருத்தனுக்கு தன்னோட கிட்னிய எடுத்துக் குடுத்திடுங்கன்னு சொல்றானே!”
;டாக்டர; யோசிக்காதீங்க டாக்டர்!…நான் சாகறதுக்கு முன்னாடி ஆபரேஷன் பண்ணி என்னோட கிட்னிய எடுத்திடுங்க டாக்டர்!” அவன் கண்களில் அவசரம் தெரிந்தது.
டாக்டருக்கும் அவன் எண்ணம் சரியெனவே பட்டது.
நீண்ட யோசனைக்குப் பிறகு, நர;ஸை அழைத்து சுந்தரின் மெடிக்கல் ரிப்போர்ட் பைல்களை எடுத்து வரச் சொன்னார்.
அவனது ஸ்கேன் ரிப்போர;ட்டை காஷுவலாகப் பார;த்த டாக்டர; அதிர்ந்தார்;.