மோகன்குமார்
 
கேள்வி: கார்த்திகேயன்
 
 
ஐயா,

    வணக்கம், என்னுடைய பூர்வீக சொத்தில் உள்ள வீட்டை இரு பங்குகளாக தாத்தாவும் அவருடைய அண்ணனும் பிரித்துக் கொண்டார்கள். அப்போது என்னுடைய தாத்தாவின் வீட்டிற்குச் செல்ல ஒரு பொதுப் பாதை அமைத்துக் கொண்டார்கள். தாத்தாவின் அண்ணன் அப்பாதையை (பெரிய தாத்தா) பத்திரத்தில் குறிப்பிட்டு பிரிவில்லாத பாதி பாத்தியம் என்று எழுதி இரண்டு பத்திரங்களாக பதிவு செய்தனர். இப்போது என்னுடைய தாத்தாவின் அண்ணன் (பெரியதாத்தா) மகள் அவர்களுடைய பாக வீட்டை வேறு ஒரு நபருக்கு விற்றுவிட்டார். அப்படி விற்கும் போது எங்களிடம் கேட்கவில்லை. இப்போது அந்த வீட்டை வாங்கியவர் அந்தப் பாதையை பின்னால் இருக்கும் எங்கள் வீட்டின் வாசல் முடிவு வரை உரிமை கோர முடியுமா? அல்லது அவர் வாங்கிய வீட்டின் அளவு வரை பாதையை உரிமை கோர முடியுமா? ஏனெனில் அவருக்கு ரோட்டின் மீது வாசல் உள்ளது ஆனால் எங்களுக்கு அப்பாதைதான் ஒரே வழியாக உள்ளது. இப்போது அந்த வீட்டை வாங்கியவர் அப்பாதையை எதுவரை உரிமை கோர முடியும்? அல்லது பாதி அளவு மறைக்க உரிமை உள்ளதா? சட்டம் அதற்கு என்ன சொல்லுகிறது.
 
பதில்:
 
உங்கள் வீட்டருகில் முன்னே உள்ள இடத்தை வாங்கிய நபர் நீங்கள் செல்ல முடியாத படி முழுதும் மறைத்து கட்டிடம் கட்ட முடியாது. இரண்டு வீட்டுக்கும் பொதுவான நடைபாதை மீது இருவரும் செல்ல உரிமை உண்டு. இதற்கு பெயர் ஈஸ்ட்மென்ட்  உரிமை. இதன்படி நடந்து செல்ல இருக்கும் வழியை மறித்து ஒருவர் தனக்கான வீடு கட்டிக் கொள்ள முடியாது
 
மேலும் முதலில் இரு வீடாக பிரித்த பார்டிஷன் டீடை எடுத்து படித்துப் பார்க்க வேண்டும். அதிலேயே இந்த நடைபாதை இருவருக்கும் பொதுவானது என்று குறிக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்க வேண்டும். அப்படி குறிப்பிட்டிருந்தால், முன்னர் வீடு வைத்திருக்கும் நபருக்கு தனது வீட்டுக்கு முன் உள்ள இடத்துக்கு முழு உரிமை கிடையாது. குறிப்பாய் அங்கு பில்டிங் கட்ட உரிமை வராது.
 
மேலும் விபரங்களுக்கு உங்களுக்கு தெரிந்த வழக்கறிஞரை இது சம்பந்தமான டாக்குமெண்டுகளுடன் அணுகுங்கள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *