சாது மிரண்டால்…
இன்னம்பூரான்
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். மக்களின் திரண்ட சக்தி கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்திய ஃபிரெஞ்சுப்புரட்சி இன்றளவும் உலகில் மறக்கப்படவில்லை ~ ‘விடுதலை, நேயம், சமத்துவம்.’ ஒரு தாரகமந்திரம். மக்கள் கொதித்தெழுந்து முசோலினியை தூக்கிலிட்டனர். காந்தி மஹான் அடங்கிக்கிடந்த இந்தியாவை தட்டி எழுப்பி, ஆங்கில சாம்ராஜ்யத்தை ஒடுக்கினார். ரோஸா பார்க்ஸ் அமெரிக்காவில் இனவெறியை ஒழிப்பதற்கு வித்திட்டார். இன்றைய அதிபர் ஒரு ஆஃப்ரோ அமெரிக்கன்.
இன்று எகிப்திலும், பிரேசிலிலும் மக்கள் சக்தியை சித்திர ரூபத்தில் பாருங்கள்.
எகிப்து: டஹ்ரீர் சதுக்கம்.
ரியோ மக்கள் எழுச்சி.
எகிப்தில் புரட்சியின் விளைவாக பதவியேற்ற அதிபர் மோர்சி யதேச்சதிகாரம் நாடுகிறார். அரசியல் சாஸனத்தை வரையும் கமிட்டியிலிருந்து லிபரல் சிந்தனையாளர்கள் விலக நேரிட்டது. அதனால் அந்த கமிட்டியின் ஆளுமையை கைப்பற்றியவர்களை வலுவிழக்கும் வகையில் நீதிபதிகள் சுதந்திரமாக இயங்குவதற்கு தடை விதிக்கத்தான் இந்த யதேச்சதிகாரம் நாடுதல். அதை மக்கள் எதிர்க்கிறார்கள்.
பிரேசிலில், மத்திய அரசு ரியோ மாநாட்டின் எண்ணை வளத்தை மற்ற மாநாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது. ரியோ மக்கள் எதிர்க்கிறார்கள். 3 பிலியன் டாலர் சொத்தை இழக்க யார் தான் ஒத்துக்கொள்வார்கள்? இங்கு பிரதிநிதிகளுடன், மாநில மக்களின் போராட்டம்.
இதற்கு மேல், நுணுக்கமாக ‘சாது மிரண்டதின்’ பின்னணியை நான் அலசவில்லை. அதனால் கருத்துக்கூறவில்லை. நான் சொல்ல வருவது மக்கள் திரண்டு வந்தால், அதிகாரத்தில் இருப்பவர்கள் ஓரளவுக்கு மேல் ஈடு கொடுக்க முடியாது என்பதே. அதற்கு காலம் பிடிக்கலாம். விலை அதிகமாக இருக்கலாம். உயிர்ச்சேதம் அதிகரிக்கலாம். ஆனால், வெற்றி, மிரண்ட சாதுவுக்கே. இந்தியாவுக்கு இதில் பாடங்கள் நிறைய இருக்கின்றன. சர்வதேச அமைப்புகள், இராஜ்ய பரிபாலனம், சமூகம், சமுதாயம், சட்டசபை, பஞ்சாயத்து, குழாம், சுற்றம் யாதாக இருப்பினும், அநீதி நிலைத்து நிற்காது. சாது மிரளும். வாகை சூடும்.
தர்மம் சர.
இன்னம்பூரான்
27 11 2012
சித்திரங்களுக்கு நன்றி:
http://images.fastcompany.com/upload/tahrirsquare.jpg