வாதாபி பூத நாதம் தேவார வைப்புத்தலம்

2

 


நமசிவாய

18 திருமுறை பாடல்களில் பெயர்வழி குறிக்கப் பெற்ற   ‘பூத நாத-வாதாபி’ ஓர் தேவார வைப்புத்தலம்

 

நூ.த.லோகசுந்தரமுதலி

மயிலை

 

பாதாமி=வாதாபி, வடகருநாடகம், ஆதி  பூதநாதர்

 

                                                பூத நாதனைப் பூம்புக லூரனைத்

                                                தாதுஎனத் தவழும் மதி சூடியை

                                                நாதனை நல்ல நான்மறை ஓதியை

                                                வேதனை நெருநல் கண்டது வெண்ணியே

                                                            திருநாவுக்கரசர் – குறுந்தொகை 5.17.6

 

          புகுமுன்

தமிழக சித்தாந்த சைவநெறியின் மறைகளாம் தேவாரம் திருவாசகம் எனும் தொடக்கத்தின வான நூற்களின் 18000+ பாடல்களில் பதிகம் ஏதும் பெறாமல் சிவபெருமான் உறையும் திருஊர்களாக குறிக்கப்பட்ட பெருமை மட்டும் உடைய சிவத்தலங்கள் ‘வைப்புத் தலங்கள் என வழங்கப்படும் மரபினை சிலரே அறிவர்.

 

          சிவபெருமான் பல்பெயர்த்தவன்

சிவபெருமான் சீர்மை பாடும் இத்திருமுறைப் பதிகப் பாடல்கள் தன் தலைவரின் பண்பு களை பற்பல பெயர் கொண்டு ஒவியப்படுத்தியுள்ளன. ஆலநீழலான், பசுபதி, பாசுபதன், பிறைசூடி, நெய்யாடி, பிஞ்ஞகன், ஆதி, அவிநாசி, மணாளன், மாதொருபாகன், மணவா ளன், விகிர்தன், கபாலி, தாயுமானவன், கோளிலி, பிறப்பிலி, சடைமுடியன், காரோணன், ஆனேறி எனப் பல்வேறு  பெயர்களால் வழங்கி போற்றப் பெற்றமை காணலாம்.

 

          சிவபெருமான் பூத நாதன்

அவ்வழி பூதநாதன் என்பது சிவபெருமானுக்கு வழங்கும் நூற்றுக்கணக்கான பெயர்களில் ஒன்று. நிலம், நீர், தீ, காற்று, வானம் எனும் ஐம்பெரும் பூதங்களை அடக்கி  பேணும் ‘நாதனாக விளங்குவதாலாகும்.  ஐந்துபூதங்களின்-நாதன் எனக்காட்டும் சிறப்பு வழிபாட்டிற்கென தனித்தனியே திருஆரூர், திருஆனைக்கா, திரு அண்ணாமலை, காளத்தி, தில்லை என 5 பூதத்தலங்களை அமைத்து போற்றுகிறோம். பூத நாதன் என பெயர் விளி காணும் 18 பாடல்களுடைய ‘பெயர்வழித் திருமுறை’ தொகுப்பு உள்ளது.

 

          பூத நாதன் பரந்தவன்

இந்தியாவில் பூதநாதன் என மூர்த்திப் பெயர்கொண்ட தலங்கள் நூற்றுக்கும் மேலுள்ளதாக அறிகிறோம் காசி இராமேச்சுரம், கயிலாயம் எனும் புகழ்பெற்றவை தன் பெருமையால் பற்பல இடங்களில் விசுவநாதர், இராம நாதர், கயிலாய நாதர் என தல இறைவன் பெயரிட்டு வழிபட வழி கோலியது போல்

பூத் நாத்’ மந்திர்கள் (பூத நாதர் கோயில்கள்) வடக்கே பாட் டியாலா முதல் கிழக்கே அசாம், மேற்கே ஜுனாகாட், தெற்கே காஞ்சி வரை உள்ளமை இணையதள பதிவுகள்வழி அறியமுடிகின்றது. எனவே பூத நாதம் எனும் ஆதியும் மூலமும் ஆன தொன்மைத்தலம் ஒன்று பழங்காலத்தில் புகழுடன் விளங்கியுள்ளமை வரலாறாகின்றது.

 

          பூத நாதன் திருவூர்கள்

குனுபூர் (ஒரிசா); மண்டி (இ.பி); கானாபூர், வாதாபி, தோர்கல் கோட்டை (கருநாடகம்); பகாடி, பூர்ணியா (பீகார்); மகுவா, மந்துவா (ம.பி); லக்மண்கர், பிகானீர், ஜோத்பூர், ஜுனாகாட், பிலானி, அபு (இராஜஸ்தான்); பகாரா, பல்பிபூர், சோர்வட், பரூஷ், படகளா, நவசாரி, போர்பந்தர், பவநகர் (குஜராத்); கோனால், சந்திரேஷ்வர் (கோவா); நவாடி(ஜார்கண்ட்) கோலாகோகர்நாத், ரிஷ்கேஷ், (உ.பி.); சிந்துதுர்க், நேரூர், (மகாராஷ்டிரா); பொகரோ (சத்தீஷ்கர்); ஜிண்டு(அரியாணா); பர்துவான் (மே.வ) பாடியாலா, அமிர்தசரஸ் (பஞ்சாப்); முதலிய பற்பல ஊர்களில் பூத் நாத் கோயில்கள் பரந்து காணப்படுகின்றன.

 

வளர்ந்த பூத நாதர் பெருமையால் பம்பாய், டில்லி, கல்கத்தா, லக்னோ, சிம்லா போன்ற மக்கள் பெருகி இடம் பெயர்ந்து வாழும் பெருநகரங்களிலும் புதிது புதிதாக பூத் நாத் என பெயர் தாங்கிய சிவபெருமான் கோயில்கள் பல தோன்றியுள்ளன. மேலும் பற்பல தலங்கள் (108) நிறுவப்பெற்ற காசி, பர்டுவான் புவனேசுவர் காஞ்சிபாலி  போன்ற புண்ணிய தலங்களிலும் ஓர் பூத் நாத் கோயிலைக் காணலாம். ஈங்கு சிவராத்திரி’விழா மிகச்சிறப்பாக நடைபெறுவதாகவும் இமாசலப்பிரதேச மண்டி’யிலும் கொங்கண  கோவா வில் மலைமீதமைந்த பூதநாதர் கோயிலும் அக்கம்பக்கத்து மக்களால் பெரிதும் போற்றப்படு கின்றதாம். மகாதேவ் எனும் பெயர் சிவனைக் குறிப்பதுபோல் பலஇடங்களில் பூத் நாத் என்பதே பொதுநிலையில் சிவபெருமான் என பொருள் படவே பயன்படுகின்றமையும் காணப்படுகின்றது.

 

           வாதாபி ஆதிமூல பூத நாதம்

பழங்காலத்து கருநாடகத்தில் சீரும்சிறப்பும் பெற்றிருந்து இந்நாள் ஓர் சிற்றூராகும் பாதாமி யில் அதாவது முன்னாள் வடுகநாட்டு வாதாபி யில் எழில்மிகு அகத்தியர்’ ஏரிக்கரையில் அமைக்கபட்டுள்ள பூத நாதர்’ கோயிலே மிக்கபழமை உடையதாகத் தெரிகின்றது. சம்பந்தர் அப்பரடிகளின் காலம் 7ஆம் நூற்றாண்டில் சிறப்புற்றிருந்துள்ளது. இங்குகாணும் பலஅடுக்கு களில் அமைந்த குடைவரைக் கோயில்கள் இந்நாள் சீர்குலைந்து வழிபாடின்றி புராதன சின்னங்களாக நிற்கின்றன. தொல்லியல் துறையினர் ஆய்ந்த ஏழாம் நூற்றண்டு கல்வெட்டு களாலும் அடுத்தடுத்த குகைகளில் சிவபெருமானுடையதைத் தவிர அருகு திருமா லுக்கும் ஜைன தீர்தங்காரருக்கும் அமைந்த தனித்தனி குகைக் கோயில்கள் பழமைக்குச் சான்று பகர்கின்றன.

 

‘வாதாபியே மிகப்பழமையான பூதூர் எனவும், அதன் நடுநாயகமான பூத நாதர் கோயிலும் ஐயமின்றி சால பழமை உடையது. இக்குடைவரைக் கோயில்கள் மகேந்திரவர்ம பல்லவன் காலத்து சாளுக்கிய மன்னன் புலிகேசியின் ஆணைவழி ஏழாம்நூற்றாண்டில் கட்டப் பட்டவைகள் என ஆய்வாவணங்கள் உள்ளன. சேக்கிழாரின் பெரிய புராணக் கருத்துவழி சிறுத்தொண்டர் பல்லவப் போர்த் தலைமை ஏற்று வடுகநாட்டுப் போரில் வென்று திரும்பிய பழமைஉடைய வாதாபி இதுவே. இணையவழி கண்ட மற்ற கோயில்கள் எவற்றிற்கும் அவற்றின் தோற்றம், கிட்டிய ஆவணம்வழி இவ்வகை பழமை காணப்படவில்லை. பற்பல மிகமிக பிற்காலத்தவை. ஓருசில சென்ற நூற்றாண்டில் தொடரும் பழங்கீர்த்தியில் கிளைத்தவை ஆகும்

 

          வாதாபி வைப்புத்தலம்

தேவாரம் குறித்த ஓங்காரம், திரியம்பகம், சோமேச்சுரம், நாகேச்சுரம், மாகாளேச்சுரம்என்பன ஓர்வகையில் நிரல்பட்டு போற்றப் பெறும் அம் ஈற்று வடநாட்டுத் தலங்கள் போன்று பூத நாதன் என ஓர் தல இறைவன் 18 பாடல்களில் போற்றப்பெற்ற பெயர்வழி பெறப்படும் தலம் ‘பூநாம்‘. வாதாபியில் உள்ள ஆதி பூத நாதர் கோயிலே என அதனை ஓர் தேவார வைப்புத்தலம் எனக் கொள்ளலாம்.

 

            பூத நாயகன், பூ தேச்சுரம்

தேவார திருமுறைகளில் பூத நாதன் போன்று பூத நாயகன்‘ எனஓர் பெயரும் மேலும் 10 பாடல்களில் காணப்படுகின்றது. வடநாட்டிலும் பூத் நாத் உடன் ‘பூ தேஷ்வர்’ என பெயர் வழங்கும் ‘மந்திர்கள் நூற்றுக்கும் மேலுள்ளன. நுணிகிய நிலையில் இவ்விரு சொற்களுக்கு இடையுள்ள ஒற்றுமையும் வேற்றுமை, பூதம் எனும் சொல்லின் மாற்றுப் பொருள்கள், பூதகண-பதி’ வழிபாடு, அதன் வாதாபித் தொடர்பு முதலியன அடுத்து தொடரும் ஓர் கருத்துரையில் காண்போம்.

 

கீழ்காணும் படங்களின் தொகுப்பினில், இந்தியாவில் பரந்துள்ளசில பூத் நாத் மந்திர் களைக் காண்க. இவற்றில் மிகச்சிலவே பழமையான. பற்பல மிகமிகப் புதியன. 

 

 

திருச்சிற்றம்பலம்

<><><><><>

 

 

3 attachments — Download all attachments   View all images  
  endimage.jpg
214K   View   Download  
  imageatstart.jpg
110K   View   Download  

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வாதாபி பூத நாதம் தேவார வைப்புத்தலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *