எந்த முகம்…
கடவுள் கொடுத்த முகத்தைக்
கழற்றி வைத்துவிட்டு,
கைவசம் தயாராய் உள்ள
கபட முகங்களை
கணத்துக்கொன்றாய் மாட்டிக்கொண்டு
காட்சியளிக்கிறான்
காசினியில் மனிதன்..
இங்கு வந்து பார்க்கும் இறைவனும்,
இவர்கள் எழுப்பிய கோவில்களில்
இருப்பதாய்ச்சொல்லும் இறைவனும்
ஏமாந்து விழிக்கிறான்-
எந்தமுகம் இவர்களுக்கு நாம்
தந்தமுகம் என்பதை அறியாமல்…!
படத்துக்கு நன்றி
http://saniyaartblog.wordpress.com/category/grade-7/