செண்பக ஜெகதீசன்    

கடவுள் கொடுத்த முகத்தைக்

கழற்றி வைத்துவிட்டு,

கைவசம் தயாராய் உள்ள

கபட முகங்களை

கணத்துக்கொன்றாய் மாட்டிக்கொண்டு

காட்சியளிக்கிறான்

காசினியில் மனிதன்..

 

இங்கு வந்து பார்க்கும் இறைவனும்,

இவர்கள் எழுப்பிய கோவில்களில்

இருப்பதாய்ச்சொல்லும் இறைவனும்

ஏமாந்து விழிக்கிறான்-

எந்தமுகம் இவர்களுக்கு நாம்

தந்தமுகம் என்பதை அறியாமல்…!

 

படத்துக்கு நன்றி

  http://saniyaartblog.wordpress.com/category/grade-7/ 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *