இயற்கை
பி.தமிழ்முகில் நீலமேகம்
கற்பனை ஓவியம் …….. உலகம்….
இறைவன் தன் எண்ணற்ற திறமைகளை
தனது உலக ஓவியத்தில்
தீட்டி வைத்துள்ளான்……….
நீரோடையென……..கடலென ……
மலையென…… நிலமென ……..
நீரென…..காற்றென…..
அந்த வண்ண ஓவியத்தில்
நாமும் நடமாடும்
கதாபாத்திரங்கள்……
நாம் இருக்கும் அழகான ஓவியத்தை/ புகைப்படத்தை
பொக்கிஷமாய் காப்போம் அன்றோ???
காத்திடுவோம் – இறைவன்
நமக்களித்த இயற்கையை…….
நம் பொக்கிஷமென……
விட்டுச் செல்வோம் – நம்
சந்ததிக்கு வளமான இயற்கையை வரமாய்……..
படத்திற்கு நன்றி:
http://www.prelovac.com/vladimir/beautiful-nature-pictures