பொழுதின் மீதான உறவு – கவிதை

0

மு.கோபிசரபோஜி

மொக்கொன்று
அப்பொழுது தான்
பூத்த தருணம் போல இரவு.

இரவுடனான
அந்த நெருக்கத்தை
எந்தவொரு பகலும்
எட்டவேயில்லை என்னிடம்.

துருத்தி தெரியும் படி
தன் இயலாமைகளையும்
இல்லாமைகளையும்
வார்த்தை கத்திகளாக்கி……..

என் நெஞ்சில் தேக்கி
நெருடலின்றி சன்னமாய்
கடந்து போகிறவர்கள்
பகலில் உலவித்திரிகையில்…….

வஞ்சத்தை விட
பரிதாபம் மட்டுமே
மிஞ்சுகிறது
எனக்கான
எல்லா பகலிடமும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *