தொல்லை காட்சி – குஷ்பூ – ஜோடி பொருத்தம் – டாடி ஒரு சந்தேகம்

0

மோகன் குமார்

டாடி ஒரு சந்தேகம்அ

ஆதித்யாவில் வரும் புதிய நிகழ்ச்சி ” டாடி ஒரு சந்தேகம்” ; ஒரு அப்பா – மகன் இருவரும் பேசிக் கொள்வதாக சில டயலாக் வரும். அப்புறம் காமெடி சீன் போடுவாங்க.

மகனாக – சற்று வளர்ந்த ஒரு மனிதரே தான் வருகிறார். பேச்சு வாக்கில் ” டாடி ஒரு சந்தேகம்” என எடக்கு மடக்காய்    எதோ ஒரு கேள்வி கேட்கிறார்

உதாரணத்துக்கு  ஒன்று

” டாடி  சண்டே சினிமா போகலாம் டாடி “

” வேணாம்பா தியேட்டர் ஹவுஸ் புல் ஆயிருக்கும் “

” டாடி ஒரு சந்தேகம் .. தியேட்டர்-  புல் ஆனா, தியேட்டர்  புல் – னு தானே சொல்லணும்? ஏன் ஹவுஸ் புல்னு சொல்றாங்க?”

இப்படி மொக்கை போட்டாலும் கூட சின்னப் பசங்களுக்கு இந்த ஜோக்குகள் பிடிக்கிறது ! அடிக்கடி பார்க்கிறார்கள் !

பிளாஷ் பேக் – ஜோடிப் பொருத்தம்

சன் டிவி துவங்கிய காலத்தில் வந்தது ” ஜோடிப் பொருத்தம்”. ரெகோ  என்கிற பெயர் கொண்ட நபர் வெய்யில் காலத்திலும் கோட், டை எல்லாம் கட்டிக் கொண்டு கணவன் – மனைவியை கேள்வி கேட்பார். வந்த புதிதில் மிக நன்கு வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி இது. ஒரு நேரத்தில்,  வெளியூர்களில் மேடையில் வைத்து இந்த நிகழ்ச்சி நடத்துவார்கள். திருச்சியில் அப்படி நடந்த போது (அப்போது எனக்கு கல்யாணம் ஆகலை) அந்தப் பக்கம் சென்றபோது கூட்டம் நிரம்பி  வழிந்தது.

ரெகோ  கேள்விகள் கேட்பதும் சரி குழப்பி விடுவதும் சரி புத்திசாலித்தனமாக இருக்கும். அவர் இந்த நிகழ்ச்சி தவிர அநேகமாய் வேறு நிகழ்ச்சி செய்த மாதிரி நினைவில்லை. அதன் பின் ரெகோ  என்ன ஆனார் என்றும் தெரிய வில்லை

இது மாதிரி நிகழ்ச்சிகள்  இப்போது எதோ ஒரு சின்ன டிவியில் வருகிறது ஆனால் அந்த அளவு பாப்புலர் ஆகலை. சன் டிவி மீண்டும் இந்த கான்சப்ட் கையில் எடுக்கலாம் !

சூப்பர் சிங்கர் -4

மீண்டும் துவங்கியுள்ளது இன்னொரு சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி. வெவ்வேறு ஊர்களில் நடக்கும் முதல் கட்ட தேர்வுகளை இப்போது காட்டி வருகிறார்கள். ஒரு பக்கம் ஸ்ரீ லேகா & தேவன் நீதிபதிகளாக இருக்க, இன்னொரு பக்கம் ஷைலஜா & புஷ்பவனம் குப்புசாமி இருந்தனர். ஸ்ரீ லேகா டீம் செம ஸ்ட்ரிக்ட் ஆக இருந்து பலரையும் நிராகரித்து தள்ளினர். ஷைலஜா & புஷ்பவனம் ஓரளவு லீனியன்ட் ஆக இருந்தனர். ஆக பாட வருபவர்கள் யாரிடம் போய் பாடுகிறார்களோ அதைப் பொறுத்தே அடுத்த லெவல் செல்வது முடிவாகிறது ! ஹும் 🙁

மற்றபடி துவக்கம் எப்பவும் ஸ்லோ தான்.

டிவி செய்திகளில் குஷ்பூ பிரச்சனை

குஷ்பூ மீது திருச்சியில் செருப்பு எறிந்ததும், சென்னையில் அவர் வீடு தாக்கப்பட்டதும் இணையத்தில் மட்டுமல்ல, டிவி செய்திகளிலும் 2 நாள் பெரிதாய் ஓடியது. அம்மணி பேட்டி படித்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு  சற்று   கோபம் வரும்படி தான் இருந்தது. (விகடனில்  பேட்டி எடுத்தவர் கைவண்ணம் எந்த அளவோ தெரியவில்லை )

முன்பு கோவில் கட்டிய திருச்சியிலேயே, இன்று  செருப்பும் எறிந்தனர் என முகநூலில் குறிப்பிட்டார் வீடு சுரேஷ் குமார் ! வாழ்க்கை ஒரு வட்டம் என்பது நிரூபமணமாகிறது பாருங்கள் !

நிலம் வாங்கலியோ நிலம்

சனிக்கிழமை காலை டிவி பொட்டியை போட்டால் போதும் ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ டிவி என எல்லா சானலிலும் நிலம் வாங்கலியோ நிலம் என சின்னத் திரை நடிகர்கள் வந்து கெஞ்சிக் கெஞ்சி கேட்கிறாங்க. ஒவ்வொன்னும் அரை மணி நேர விளம்பரதாரர் நிகழ்ச்சி. 5 நிமிஷம் பாத்தா  போதும், போனை எடுத்து மத்த விபரங்களைக் கேட்க வச்சிடுவாங்க. அவ்ளோ தூரம் பில்ட் அப் செய்றாங்க

போனை எடுத்து அந்த நம்பருக்கு முயற்சித்தால் கிடைப்பதே இல்லை. டிவியில் அவர்கள் விளம்பரம் வரும் அந்த அரை மணி தான் அவர்கள் கஸ்டமர் பிடிக்கிற நேரமே போலிருக்கு. நம்ம நம்பரைப் பார்த்து விட்டு பின் அவர்களே போன் செய்தனர் நான் கேட்ட கேள்விகள் ரொம்ப சிம்பிள் ” அப்ரூவ்டு நிலமா? ” ” ஆமா சார் பஞ்சாயத்து அப்ரூவ்டு ” – இது ஏமாத்து வேலை என தெரியும் – எனவே ” பேங்க் லோன் கிடைக்குமா ? ” என அடுத்து கேட்க ” கிடைக்காது சார்” என வழிக்கு வந்தார்கள். வெறும் நிலத்துக்கும் கூட வங்கிகள் லோன் தரும்; ஆனால் அது அப்ரூவ்டு என்றால் மட்டுமே கிடைக்கும்

இவர்கள் தரும் விளம்பரத்தை நம்பி இடம் வாங்குவோர்  என்றோ ஒரு நாள் அவர்கள் விற்கப் போகும் போது இது அப்ரூவ்டு இடம் அல்ல என உணர்வார்கள். பாவம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *