செண்பக ஜெகதீசன்

அவரவர்க்கும் இருக்குது

ஆயிரம் வேலை- அதில்

அடுத்தவர் நிலைமீது

ஆகுமா கவலை,

 

சுவரின்றி அழகாய்ச்

சித்திரம் எழுதவா- அது

சுவடின்றி அழிவதில்

சுவையென்ன வாழுது..

 

கவலையை மறந்திடக்

கைவசம் யுக்திகள்- அதைக்

காட்டிடத் தோன்றுதே

கண்ணிலே பக்திகள்,

 

சவலைப் பிள்ளையாய்ச்

சமுதாயம் ஆனதே- அதைச்

சீரிடா நாட்டிலே

சிதையுதே மானமே…!

 

 http://www.istockphoto.com/stock-photo-20966885-sad-worried-young-man-with-hands-on-face.php               

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சித்திரம் சிறக்க…

  1. சவலைப் பிள்ளையாய்ச்
    சமுதாயம் ஆனதே- அதைச்
    சீரிடா நாட்டிலே
    சிதையுதே மானமே– சமூகத்தின் மீதான உங்கள் பொறுப்புணர்வைகாட்டும் வரிகள் பாராட்டுக்கள்

  2. திருமலைசோமு அவர்களின் பாராட்டுரைக்கு
    மிக்க நன்றி…!
    -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply to -செண்பக ஜெகதீசன்...

Your email address will not be published. Required fields are marked *