சித்திரம் சிறக்க…
அவரவர்க்கும் இருக்குது
ஆயிரம் வேலை- அதில்
அடுத்தவர் நிலைமீது
ஆகுமா கவலை,
சுவரின்றி அழகாய்ச்
சித்திரம் எழுதவா- அது
சுவடின்றி அழிவதில்
சுவையென்ன வாழுது..
கவலையை மறந்திடக்
கைவசம் யுக்திகள்- அதைக்
காட்டிடத் தோன்றுதே
கண்ணிலே பக்திகள்,
சவலைப் பிள்ளையாய்ச்
சமுதாயம் ஆனதே- அதைச்
சீரிடா நாட்டிலே
சிதையுதே மானமே…!
http://www.istockphoto.com/stock-photo-20966885-sad-worried-young-man-with-hands-on-face.php
சவலைப் பிள்ளையாய்ச்
சமுதாயம் ஆனதே- அதைச்
சீரிடா நாட்டிலே
சிதையுதே மானமே– சமூகத்தின் மீதான உங்கள் பொறுப்புணர்வைகாட்டும் வரிகள் பாராட்டுக்கள்
திருமலைசோமு அவர்களின் பாராட்டுரைக்கு
மிக்க நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…