வருணன்

முன்னரே தோற்றவனும்

பின்னர் தோற்கவிருப்பவனும்

சந்தித்துக் கொண்டனர்

நதியிடை பாய்ந்த

பாலத்தின் நடை பாதையில்.

முன்னவன் மௌனித்திருக்க

பின்னவன் பேசிக் கொண்டேயிருந்தான்
தொகுப்பாளினி யுவதி போல்

கடிதங்கள் நிழற்படங்கள்
வாழ்த்து அட்டைகளில்
முத்தமிட்ட இதழ்களின் முத்திரைகள்
பிறக்கப் போவதாய் கனாக் கண்டிருக்கும்
மழலைக்கான கிங்கிணியென
யாவற்றையும் காட்டினான்

தன்னிலை மாறா முன்னவனோ
கழிந்த காலத்தில் இதைப் போலவே
தானுளறிய கதைகளை
விசிறியெறிந்த நதியைப் பார்த்தான்
இதழிலரும்பிய புன்னகையோடு

தோற்றவனிடம் தோற்பவன் காட்டிய
யாவும் போலொன்றை
முன்னொரு நாளில் விழுங்கிய நதியோ
தீராப் பசியுடன் அசைவாடியது.

 

படத்துக்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *